முதல்வர் ஸ்டாலின் ஏதோ அவதார புருஷன் போல பேசுகிறார் - ஆர்.பி. உதயகுமார்!

திமுக தேசிய கட்சிகளில் கூட்டணி வைக்கும் போது எல்லாம் பதவிக்காக நிபந்தனை வைத்து தவிர, மக்கள் நலனுக்காக நிபந்தனை வைக்கவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Apr 25, 2025, 10:58 AM IST
  • மக்கள் போடும் கணக்கு நியாய கணக்கு.
  • எடப்பாடியார் போடும் கணக்கு வெற்றி கணக்கு.
  • திமுக போடும் கணக்கு மனகணக்கு - ஆர்.பி.உதயகுமார்.
முதல்வர் ஸ்டாலின் ஏதோ அவதார புருஷன் போல பேசுகிறார் - ஆர்.பி. உதயகுமார்!

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மறு வடிவம் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, 11 வது திண்ணை பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டு மக்களுக்கு உண்மையை நாம்  எடுத்துரைக்க வேண்டும். சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானிய கோரிக்கையில் எடப்பாடியார் பேசினார், அப்பொழுது முதலமைச்சர் நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பிஜேபியில் கூட்டணியில் அதிமுக தொடருமா என கேள்வி எழுப்பி உள்ளார். இன்றைக்கு மகத்தான வெற்றி கூட்டணியை அமைத்த எடப்பாடியாரின் வீயூகத்தைக் கண்டு முதலமைச்சருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சில வரலாற்றை மக்களுக்கு நினைவூட்ட  கடமைப்பட்டுள்ளோம், 1977 ஆம் ஆண்டு அன்றைய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை சந்தித்த கருணாநிதி, இந்திரா காந்தி என் மீது போடப்பட்ட சர்க்காரியா வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும் படிக்க | பழனிசாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்.. மீண்டும் மோதல்?

அப்போது மொரார்ஜி தேசாய் கூட்டணி என்பது வேறு, வழக்கு என்பது வேறு நீதிமன்றத்தில் அதை சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். அன்றைக்கு இந்த செய்திகள் வெளி வந்தது, இந்த செய்தியை ஸ்டாலின் மறந்தாரா? இந்த செய்தியை யாரும் மறுக்க முடியாது, அன்றைக்கு நிபந்தனை வைக்கத்தான் ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்தா? தொடர்ந்து எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்த பொழுது காயம் ஆறாத நிலையில் அப்பொழுது 1980-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக, காங்கிரஸ் எந்த நிபந்தனையுடன் கூட்டணி வைத்தது ?அன்றைக்கு மெஜாரிட்டி பலத்துடன், மக்கள் செல்வாக்குடன் இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, இந்த நிபந்தனைக்கா கருணாநிதி கூட்டணி வைத்தார்.

பண்டாரம், பரதேசி என்று பிஜேபியை விமர்சித்து அதனை தொடர்ந்த கூட்டணி வைத்தார் எந்த நிபந்தனைக்காக ? 2004 இல் காங்கிரஸ், கட்சியுடன் கூட்டணி அமைத்து பத்தாண்டு காலம் அங்க மிகுந்த திமுக தனது ஆட்சி ,அதிகாரத்தை வைத்து கச்ச தீவை மீட்டதா? அல்லது முல்லைப் பெரியார், காவிரி போன்ற பிரச்சனைகளுக்கு  முடிவுக்கு கொண்டு வந்ததா? இதை எல்லாம்  ஏன் செய்யவில்லை என்று தான் மக்கள் கேள்வி அன்றைக்கு எழுப்பினார்கள். மாறாக தற்போது சட்டத்துறை அமைச்சராக இருக்கும் ரகுபதியை அன்றைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை வைத்தார், மறுநாள் அமைச்சரவை பட்டியலில் வனத்துறை இணை அமைச்சராக செய்தி வெளிவந்தவுடன் கருணாநிதி கோபம் கொண்டு வனத்துறையாக மாற்றியது யார்? என்று கேள்வி எழுப்பி தனது ஆதரவு கடிதத்தை நிறுத்தி வைத்தார்.

பின்பு ரகுபதி உள்துறை இணை அமைச்சர் என்று அறிவித்தவுடன் தனது ஆதரவு கடிதத்தை ஜனாதிபதிக்கு கொடுத்தார். இப்படி பதவிக்காக நிபந்தனை வைத்ததே தவிர, திமுக மக்களுக்காக எப்பொழுதும் கூட்டணி நிபந்தனை விதிப்பது இல்லை. இதை மனசாட்சியோடு ஸ்டாலின் கூற வேண்டும். இன்றைக்கு ஸ்டாலின் ஏதோ அவதார புருஷன் போல, சத்தியவான் போல சட்டசபையில் கேள்வி எழுப்பி, திமுக கூட்டணி வைத்தால் புனிதம், அதிமுக கூட்டணி வைத்தால் பாவம் என்று பாவகணக்கு, புண்ணிய கணக்கு, அந்த கணக்கு, இந்த கணக்கு என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் பேசுகிறார்கள். மக்கள் போடும் கணக்கே நியாய கணக்கு, அதை புரிந்து கொண்டு எடப்பாடியார் போடும் தேர்தல் வெற்றி கணக்கு, திமுக போடும் கணக்கு வெறும் மனக்கணக்கு. எடப்பாடியார் வெற்றி கணக்குக்கு தான் மக்கள் தீர்ப்பளிப்பார்கள், சட்டசபையில் முதலமைச்சர் வாதத்தை பார்க்கும் பொழுது அவருக்கு வந்தால் ரத்தம், நமக்கு வந்த தக்காளி சட்னி என்று சொல்லுவதை பார்த்தால், நகைச்சுவையாக நாம் கடந்து போக வேண்டும். திமுகவின் பேச்சுக்கு மக்கள் முக்கியத்துவம் தரமாட்டார்கள், இதுபோன்று உண்மையை திண்ணைப் பிரச்சாரம் மூலம் உலகிற்கு உரக்க செல்ல வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க | கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் - முதலமைச்சர் அறிவிப்பு!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News