அதிமுக பாஜக கூட்டணி முறிவு: எடப்பாடி பழனிசாமி தான் உண்மையை சொல்லணும் - அண்ணாமலை

பாஜவுடனான கூட்டணி முறிவு தொடர்பான உண்மையான காரணத்தை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 10, 2024, 08:12 AM IST
  • அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏன்?
  • எடப்பாடி பழனிசாமியிடம் கேளுங்கள்
  • பதில் சொல்லுங்கள் என அண்ணாமலை கேள்வி
அதிமுக பாஜக கூட்டணி முறிவு: எடப்பாடி பழனிசாமி தான் உண்மையை சொல்லணும் - அண்ணாமலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்ததித்தார். அப்போது, பாஜக அரசு தமிழகத்திற்கு திட்டங்களை அளிக்காததால் தான் பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஏற்கனவே அண்ணாமலை தலைவராக இருப்பதால் கூட்டணியை முறித்து கொள்வதாக ஒரு அறிக்கையை அனுப்பினார்களே, கட்சி நிர்வாகிகளை வைத்து தீர்மானம் நிறைவேற்றி அறிக்கை கொடுத்தார்களே, அது உண்மையா, இப்போது கூறுவது உண்மையா? என எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என்றார். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | விஜய் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்! திமுகவில் ஐக்கியம்

அப்போது ஒன்று கூறி, இப்போது ஒன்று கூறுவதால் அதிமுகவினரிடமே இது தொடர்பாக கேட்க வேண்டும் என அண்ணாமலை கூறினார். மேலும் செல்லாக்காசுக்கு எல்லாம் பதில் கூற முடியாது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு 5 முறை அமைச்சர், 7 முறை எம்எல்ஏ என கூறுபவர்கள் காலை முதல் இரவு வரை எந்நேரமும் அண்ணாமலை, அண்ணாமலை என தமது பெயரையே கூறி வருவதாக சாடினார். காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தால் மறைக்கப்பட்ட பிரணாப் முக்கர்ஜிக்கும், இந்தியாவுக்காக பாடுபட்ட நரசிம்மராவ்-க்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது எனவும், கும்மிடிப்பூண்டியில் காற்று, தண்ணீர் மாசடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில் பல மசூதிகள் உள்ளன எனவும், குழந்தை ராமருக்கு ஒரு கோயில் மட்டுமே உள்ளது. கோயில் தான் பசியாறும் இடமாக உள்ளது எனவும், அயோத்தியில் கட்டப்படும் மசூதி வேகமாக கட்டப்பட்டு இஸ்லாமியர்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அதிமுகவினர் காலை முதல் இரவு வரை அண்ணாமலை, அண்ணாமலை என்றே கூறி வருகின்றனர் எனவும், அதற்கு பதிலாக தமிழகத்தின் பிரச்சினைகளை பேசினால், பங்காளி கட்சி நிச்சயம் உருப்படும் எனவும் கூறினார். இளைஞர் நலன்துறை இருப்பது உதயநிதியை பிரமோட் செய்வது என்பதற்காகவே என தெரிவித்த அண்ணாமலை, ஏற்கெனவே நாடாளுமன்ற தேர்தலில்  கொடுத்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் என பேசினார்.  

மேலும் படிக்க | கோவை கார் வெடிப்பு வழக்கு: 20க்கும் மேலான இடங்களில் என்ஐஏ சோதனை - சிக்கியவர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News