)
Thevar Guru Poojai: பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர் செல்வத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் வருகை தந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், குறிப்பாக அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது? அதிமுகவின் நிலை என்ன? எடப்பாடி பழனிசாமியின் நெக்ஸ்ட் மூவ்? போன்ற விவரங்களை பார்ப்போம்.
அண்மையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்திருந்தார். அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்திருந்தார். மேலும் கட்சியின் தலைமை இது குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் செங்கோட்டையன் அண்மையில், ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்தும், டிவி தினகரனை சந்தித்தும் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் அதை செங்கோட்டன் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் தான், இன்று மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய விருது பூஜை கோரிப்பாளையத்தில் நடைபெறுகிறது. மதுரையிலிருந்து கோரிப்பாளையத்துக்கு வரும்பொழுது இருவரும் தனித்தனியாக வந்திருக்கிறார்கள். அதன் பின்னர் ஹோட்டலில் இருவரும் சந்தித்து பேசிவிட்டு, பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே வாகனத்தில் பசும்பொன்னுக்கு புறப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது எனக்கூறலாம்.
இந்த நிலையில் இது குறித்து அதிமுக தலைமை என்ன முடிவு எடுக்க போகிறது என்பதும் கவனிக்க எடுக்க வேண்டிய விஷயம். அதேநேரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது. அதிமுகவில் இருக்கக்கூடிய பிற முக்கிய தலைவர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது தொடர்பான கேள்வியும் எழுந்துள்ளது.
ஓபிஎஸ் ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், தற்போது செங்கோட்டையன் அவருடன் ஒரே காரில் பயணம் செய்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில் தான், ஓ.பன்னீர் செல்வத்துடன் ஒரே காரில் அவர் பயணம் செய்துள்ளார்.
இது தொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு பின்பு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து, இந்த "ஒரே காரில் பயணம் சம்பவம் குறித்து" பதிலளிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
விரைவில் தமிழக சட்டசபைக்கு (அடுத்த வருடம்) தேர்தல் வர உள்ளத்தால், கூட்டணி, அரசியல் வியூகம், பிரச்சாரம் எனக் கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என ஒரே தரப்பு கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி "யாரையும் இணைக்க முடியாது, பிரிந்து சென்றவர்கள் அப்படியே இருக்கட்டும்" என பிடிவாதமாக இருந்து வருகிறார். ஆனால் அனைவரும் ஒன்றாக இருந்தால், அது கட்சிக்கு வலு சேர்க்கக்கூடியதாக இருக்கும் எனவும் பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் எந்த புள்ளியில் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்வார்கள் என ஒரு கேள்வி இருக்கிறது. ஏனென்றால் டிடிவி தினகரனிடம் தனிகட்சி இருக்கிறது மற்றும் NDA கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவர் கூட்டணியில் மீண்டும் வருவாரா? அப்படி கூட்டனுக்கு வந்தால் யார் பக்கம் இருப்பார்?, ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். சசிகலா ஓரம் கட்டப்பட்டு உள்ளார். செங்கோட்டையன் கிளர்ச்சி செய்து வருகிறார். இப்படி பல சிக்கல்கள் இருப்பதால், அனைவரும் எந்த புள்ளியில் இணைவார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ