பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தொல். திருமாவளவன் கோரிக்கை!

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 19, 2025, 06:20 PM IST
  • பாஜக - அதிமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
  • பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக வரலாற்று பிழை செய்துள்ளது
  • செய்தியாளர்கள் சந்திப்பில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசி உள்ளார்
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தொல். திருமாவளவன் கோரிக்கை!

சிவந்தி ஆதித்தனாரின் 12-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கல்வி நிறுவனங்கள் மூலம் எளிய பிள்ளைகளுக்கு கல்வி பெறுவதற்கு வழிவகை செய்தவர், ஊக்கம் அளித்தவர். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறோம். 

பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கபரிவார் சக்திகள் தமிழகத்தில் அரசியல் சக்தியாக வளர்வதற்கு முயற்சிகளை செய்கிறார்கள். தமிழகத்தில் உள்ள பெரியார் சக்திகளை சமூக நீதி அரசியலை நீர்த்து போக குறியாக உள்ளனர். திராவிட கட்சிகளை ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி கால் ஊன்ற நினைக்கின்றனர். 

திமுக, அதிமுக வலுவிலக்க செய்ய வேண்டும் என்பதை தாண்டி இங்குள்ள சமூக நீதியை வலுவிலக்க செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம். இதையெல்லாம் தெரிந்தும் கூட அதிமுக வரலாற்று பிழை செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்தது. எனினும் மீண்டும் அதிமுக படுதோல்வி அடையும் என்பதை உணராமல் இந்த முடிவு எடுத்து உள்ளது. பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிக்க வரலாற்று பிழையை அதிமுக ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்து வரலாற்று பிழையை அதிமுக செய்துள்ளது. 

தமிழர் நலன் கருதி, சமூக நீதி அரசியலை பாதுகாப்பு கருதி பாஜகவுடன் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும். டெல்லி ஆளுமைக்கு எப்போதும் தமிழ்நாடு அவுட் ஆப் கன்ரோல் தான் என தமிழக முதமைலைச்சர் கருத்தை வரவேற்கிறோம். குடியரசு துணை தலைவர், தமிழக ஆளுநர் இருவர் சந்திப்பில் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆர்எஸ்எஸ் பயிற்சி பாசறையில் உள்ளவர்கள், ஒரே கருத்து கொண்டவர்கள். இந்த சந்திப்பு அதிர்ச்சிக்கூறியது அல்ல. 

குடியரசு துணை தலைவர் கருத்து உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பது மட்டுமே என பார்க்க முடியாது. அவர்கள் நினைப்பது போல் எல்லாம் தீர்ப்பை எழுதி கொள்ளலாம் என கருதுகிறார்கள். ராமர் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டனர். அது உண்மையான நீதி தானா என சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல் சாசன அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரவேற்க கூடிய தீர்ப்பாகும். குடியரசு துணை தலைவர் கருத்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான கருத்து அல்ல அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்தாகும். இது வன்மையாக கண்டிக்கதக்கது. மதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை, இதனால் திமுக கூட்டணியில் எந்த பிண்ணடைவும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க: இனி நீங்க யாரும் ரசிகர்கள் இல்லை.. Virtual வாரியர்ஸ் - ஆட்வைஸ் கொடுத்த தவெக விஜய்!

மேலும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகார் - பாஜக சார்பில் திட்டம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News