AK-வை பாராட்டித் தள்ளிய உதயநிதி... உடனே நன்றி சொன்ன அஜித் குமார் - அடடே...!

Ajith Kumar - Udhayanidhi Stalin: கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்த அஜித் குமார் ரேஸிங் அணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அஜித்குமார் அணி நன்றி தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 5, 2025, 06:11 PM IST
  • நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார்.
  • ரேஸ் காரில் SDAT லோகோ பயன்படுத்தப்படுகிறது.
  • அஜித் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகவில்லை.
AK-வை பாராட்டித் தள்ளிய உதயநிதி... உடனே நன்றி சொன்ன அஜித் குமார் - அடடே...!

Ajith Kumar - Udhayanidhi Stalin: நடிகர், கார் பந்தய வீரருமான அஜித் குமார் கடந்த 2023ஆம் ஆண்டில் 'Ajith Kumar Racing Team' என்ற கார் பந்தய அணியை உருவாக்கினார். தொடர்ந்து உலகம் முழுவதும் நடைபெறும் பல கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.

Add Zee News as a Preferred Source

கார் பந்தயமும், திரைப்படமும்...

அஜித்தும் கார் பந்தயம் போட்டிகள் இருக்கும்போது அதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். ரேஸ்ஸிங் சீசன் இல்லாதபோது அவர் திரைப்படங்களிலும் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ந்தாண்டு அஜித்குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் அடுத்து எந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மீண்டும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிக்க அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

இந்தச் சூழலில், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற Creventic 24H European Endurance Championship கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்று, மூன்றாவது இடத்தில் நிறைவு செய்திருந்தது. இதற்காக பலரும் அஜித்குமாருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடத்தில் நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இன்று மதியம் பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் அந்த பதிவில், "நடிகரும் - நண்பருமான அஜித்குமாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித்குமாருக்கும், அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

வெற்றிகள் குவியட்டும்...

இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்" என பாராட்டியிருந்தார்.

நன்றி தெரிவித்த அஜித் குமார் ரேஸிங் அணி

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்து அஜித் குமார் ரேசிங் அணி, அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், "தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு, அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்குத் துணை நின்றுவந்துள்ளன" என தெரிவிக்கப்பட்டது.

அஜித் குமார் அணியின் அட்டவணை 

மேலும், அஜித் குமார் ரேஸிங் அணி அதன் அடுத்தகட்ட ரேஸிங் போட்டிகள், அவை எங்கு, எப்போது நடைபெறும் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.  ஆசியன் லெ மான்ஸ் தொடர் (Asian Le Mans Series) ரேஸிங் தொடரின் முதல் சுற்று மலேசியா நாட்டின் சேபாங்கில் வரும் டிசம்பர் 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது. அடுத்துச் சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அடுத்தாண்டு ஜனவரி 31, பிப்ரவரி 1 தேதிகளில் நடைபெறுகிறது. அடுத்த சுற்று அபுதாபியில் பிப்ரவரி 7, 8 தேதிகளில் நடைபெறுகிறது. 

அதையடுத்து, Creventic 24H Series தொடரின் முதல் மலேசியா நாட்டின் சேபாங்கில் வரும் டிசம்பர் 5, 6 தேதிகளில் நடைபெறுகிறது. அடுத்துச் சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அடுத்தாண்டு ஜனவரி 9, 10 தேதிகளில் நடைபெறுகிறது. அடுத்த சுற்று துபாயில் ஜனவரி 17, 18 தேதிகளில் நடைபெறுகிறது. இவற்றுக்கு பின் அடுத்தாண்டு மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர் (Michelin Le Mans Cup – European Series), கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் (Creventic 24H – European Series) ஆகியவற்றில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த பதிவில்,"உங்களின் அன்பும், ஆதரவும், வாழ்த்துகளும் எப்போதும் எங்களுடன் இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். அஜித் குமார் மற்றும் அவரது அணி, மேலும் உயர்ந்த இலக்குகளுக்காக தங்கள் முழு மனதையும், உடலையும் அர்ப்பணித்து செயல்பட உள்ளனர்" என குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | தமிழ்நாடு கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும் படிக்க | விஜய்க்கு பாஜக கொடுத்த 'முக்கிய அட்வைஸ்' குறி வச்சா இர விழுமா? - வெளியான தகவல்!

மேலும் படிக்க | விஜய் கைது செய்யப்படுவாரா...? டக்குனு துரைமுருகன் சொல்லிய பதில் - என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News