அடுத்த 3 நாட்கள்... கனமழை இருக்கும்! எங்கு எங்கு தெரியுமா? வானிலை எச்சரிக்கை!

அதிக மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் வானிலை தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Written by - RK Spark | Last Updated : Nov 15, 2025, 03:03 PM IST
  • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
  • தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!
  • வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த 3 நாட்கள்... கனமழை இருக்கும்! எங்கு எங்கு தெரியுமா? வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் சூழல் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

காற்றழுத்த தாழ்வு பகுதி

தற்போது உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 17-ம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கும். குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த சில தினங்களுக்கு தென்கிழக்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து, ஒரு சில நாட்கள் மட்டுமே தீவிரமாக பெய்தது. அதன் பிறகு, சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக மழையின் தீவிரம் குறைந்திருந்தது. இதனால், பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. தற்போது உருவாகியுள்ள இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மழையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வாளர்களின் கருத்து

அரசு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, தனியார் வானிலை ஆய்வாளர்களும் இது குறித்த தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இது குறித்து பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், "தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், இது வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழக கடற்கரைக்கு அருகே வரும்போது, நவம்பர் 17 முதல் 22-ம் தேதி வரை வட தமிழகத்தில் கனமழையை கொடுக்கும். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கிடைக்காதா? முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News