மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்பேத்கர் ஜெயந்தி கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா தலைமை வகித்தார். மதுரை மாநகர பாஜக தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்ட 50 மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று அம்பேத்கர் குறித்த கருத்து சார்ந்த கருத்தக்களை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹச். ராஜா பேசும் போது, "காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டார்கள், தற்போது அச்சம்வத்தில் ஈடுபட்டவர்களை இந்திய ராணுவம் தேடி வேட்டையாடி வருகிறது, பாகிஸ்தானுக்கு இந்திய தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. பாகிஸ்தானின் இச்செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி ரேஷன் திட்டத்தின் குட் நியூஸ்..!
பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சரே 30 ஆண்டுகளாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட தயராகி வருகிறார். உள்நாட்டில் நாட்டிற்கு எதிராக பேசுவதை சிலர் கலாச்சாரமாக கொண்டிருக்கிறார்கள், சீமான், முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராம்மையா, திருமாவளவன் கம்யூனிஸ்ட் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, பேசி போர் தொடுக்கக் கூடாது என்கிறார்கள் இது கண்டிக்கத்தக்கது,மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிராக பேச வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள் ஆக உள்ளது. சமூக வலைதளத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் 5000 ஏவுகணைகளை ஏவி 1400 மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், ஆனால் அங்கிருக்கும் மக்கள் அந்நாட்டிற்கு எதிராக எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. வெளிநாட்டில் உள்ள தேச விரோதிகள்விட உள்நாட்டு தேச விரோதிகளே அதிகம் உள்ளனர். 1947 ல் விடுதலை நாளை துக்க தினமாக அனுசரித்தவர்கள் இங்கே உள்ள திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள். அமெரிக்கா பல்வேறு மாகாணங்களை கொண்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு பிறகு அந்நாட்டுக்கு எதிராக யாரும் பேசுவது கிடையாது ஆனால், இங்கே தேச விரோத கொள்கைகளை பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
யுத்தம் வரவேண்டும் என நாங்கள் விரும்பவில்லை அப்படி யுத்தம் வந்தால் அந்த நாட்டுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்களா என என்ன? பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மத வெறி உள்ளிருப்பது தெரிகிறது. திருமாவளவனுக்கு நாட்டுப்பற்றை கிடையாது, இவர்களைப் போன்றோரை தொடர்ந்து கண்காணிப்பில்லாமல் விட்டால் இவர்களாலே நாட்டிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. 1989-இல் காஷ்மீரில் உள்ள அனைத்து இல்லங்களிலும் பருக் அப்துல்லா முதல்வராக இருந்த நேரத்தில் ஒன்று இஸ்லாமியராக மாறு அல்லது இந்த இடத்தை விட்டு காலி செய்ய என்றும் அப்படி இல்லை என்றால் கொலை செய்யப்படுவாய் என்றும் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டப்பட்டது.
இங்கே இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள் தான், பாகிஸ்தான் பிறந்தது, பாரதத்தை பிளந்துதானே, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைச்சிருக்கோம், காவிரியில் நீர் கொடுக்காத துணை முதல்வரை அழைத்து ஆதரிக்கும் இந்த கூட்டம், பாகிஸ்தானுக்கு சிந்து நதியை நிறுத்துவைத்து பற்றி விமர்சனமாக பேசுகிறார்கள். அரசியல் சாசனம் சிறிது சிறிதாக சிதைக்கப்படுவதாக ப. சிதம்பரம் கூறிய கருத்துக்கு, 1975-ல் உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திரா காந்தி, அதை ஏற்றுக்கொள்ளாமல் எமர்ஜென்சியை அறிவித்தார். அப்போது முதுகெலும்பு இல்லாத சிதம்பரம் அது பற்றி கேள்வி எழுப்பாமல் இப்பொழுது அரசியல் சாசனம் சிதைக்கப்படுவதாக கூறுகிறார்.
அரசியல் சட்டத்தின் எந்த பகுதியையாவது பாரதிய ஜனதா கட்சி நீக்கியதா, அரசியல் சட்டத்தை இந்திரா காந்தி சிதைத்த போது உடனிருந்தவர் தான் இந்த சிதம்பரம், ஊழல்,ஊரல், போதை இதனால் முதலில் இரண்டு விக்கெட்டுகள் தமிழ்நாடு அமைச்சரவையில் விழுந்திருக்கிறது, இன்னமும் பல விக்கெட்டுகள் விழும் பார்த்து ரசியுங்கள், முதல்வரே இந்த விக்கெட்டுக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த வாரம் துரைமுருகனுக்கு எதிரான முடித்து வைக்கப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த வாரம் ஐ பெரியசாமிக்கு எதிரான முடித்து வைக்கப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டு மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.
திராவிட மாடல் அரசு சாதி, மதத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. இங்குதான் மதவெறி அதிகம் உள்ளது. தமிழ்நாடு முதல்வர் புத்தி தடுமாற்றத்துடன் பேசி, செயல்படுகிறார்,உங்கள் ஆட்சி 12 மாதத்திற்கு குறைச்சல், எப்படி போகப்போகிறார் என்பது குறித்து கெஜ்ரிவாலிடம் கேட்டுக் கொள்ளுங்கள், நீட் தேர்வு 2010- ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியால் அப்போதைய திமுக அமைச்சர் காந்திசெல்வனால் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் முதல் நீட் தேர்வு 2013-ஆம் ஆண்டு தான் தொடங்கியது. விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் காங்கிரஸ் என கட்சி தாவும் ஐந்து கட்சி அமாவாசைக்கு இந்த விசயம் குறித்து தெரியாது என செல்வப் பெருந்தகை விமர்சனம்", செய்தார்.
மேலும் படிக்க | த.வெ.க. நிர்வாகி மீது அதிரடி காட்டிய டிராபிக் போலீஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ