Amudha IAS Karur Stampede : கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் ஐஏஎஸ் ஐ பி எஸ் அதிகாரிகளின் இன்றைய மாலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விளக்கினார்.

Amudha IAS Karur Stampede : கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் ஐ ஏ எஸ் விளக்கம்:
அனுமதிக்கப்பட்ட இடம் தோராயமாக முப்பது நாற்பது அடி அகலம் உழவர் சந்தை, அவர்கள் கேட்ட இடம் தோராயமாக 60 அடி அகலம்,
3-4 மணி அளவில் தோராயமாக 20,000 பேர், தமிழக வெற்றிக் கழக தலைவர் தோராயமாக ஒன்றரை கிலோ மீட்டர் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலே வரும்போது, கூட்ட நெரிசல் ஏற்படுகிற போது தோராயமாக 25,000 மேற்பட்டவர்கள் இருந்திருப்பார்கள்.
இவ்வளவு பெரிய அரசு இயந்திரம் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த உடனே தன்னிலை விளக்கம் என்கிற பெயரில் ஏதோ ஒரு முனைப்போடு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு பெரிய அதிகாரிகள் தரவுகளை கையில் வைத்துக் கொண்டு பேசும்போதே இத்தனை புள்ளிவிவரங்களும் தோராயமாக சொல்லுகிற போது ஒரு அரசியல் இயக்கம் நடத்துகிறவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையை எப்படி சொல்ல முடியும் ஆனால் தவேகாவினர் கொடுத்த மனுவில் பத்தாயிரம் பேர் வருவார்கள் என்பதை பெரிது படுத்துகிற விதமாக அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு இருந்தது.
இதைத் தாண்டி சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாக முழுவதுமாக முதல் தகவல் அறிக்கை பதிவு கூட செய்யப்படாத சூழ்நிலையில் ஒரு நபர் ஆணையம் அமைத்த காரணம் என்ன?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை ஆணையம் அமைத்த பிறகு தற்போது உயர்நிலை அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து இதுபோன்ற விளக்கங்களை கொடுப்பதன் பின்னணி என்ன, விசாரணை ஆணையத்தின் நோக்கம் என்ன.
ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிற போது உங்களிடம் இருக்கிற தரவுகளை அந்த விசாரணை ஆணையத்திடம் தான் அளிக்க வேண்டுமே ஒழிய அல்லது அரசு தனியாக நியமித்திருக்கிற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியிடம் தான் இதையெல்லாம் ஒப்படைத்து இருக்க வேண்டுமே தவிர தற்போது இப்படி உயர் அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?
தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்தது நீங்கள்,
புலன் விசாரணை அதிகாரியாக ஒருவரை நியமித்தது நீங்கள்
இது அனைத்தும் நடந்து கொண்டிருக்கிற இந்த வேளையில் உயர் அரசு அதிகாரிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து ஏதோ ஒன்றை மக்களிடத்திலே சொல்வதற்கான முனைப்பாக நான் இதை பார்க்கிறேன் இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கிற போது ஏதோ ஒன்றை மூடி மறைப்பதற்கான முகாந்திரமாக இது தெரிகிறது, எனவே உடனடியாக மத்திய புலனாய்வுத்துறை இதிலே தலையிட்டு உரிய உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
காரணம்
இந்த மூத்த உயர் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் உடைய பத்திரிகையாளர் சந்திப்பு விசாரணையை கேலிக்கூத்தாகிற விதமாக பல்வேறு தன்நிலை விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும், இந்த விசாரணையில் என்னென்ன சந்தேகங்கள் எழுப்பப்படுமோ, என்னென்ன வினாக்கள் பொதுமக்களால் விசாரணை ஆணைய ஒரு நபர் நீதிபதியிடம் கேட்கப்படுமோ, அந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் சொல்கிற விதமாக இவர்களே தயாரித்த பதில்களை தற்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பதில் சொல்ல முடியாத கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்கிற போது ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணையை தொடங்கி இருக்கிறது எனவே அதன் மீது நாம் கருத்து சொல்ல முடியாது என்று இவர்கள் தப்பித்து செல்வதை போல இருக்கிறது இவர்களுடைய பதில்கள்,
அதே நேரம் மக்கள் மனதில் அரசின் மீது என்னென்ன சந்தேகங்கள் எழுகிறதோ அந்த சந்தேகங்களை அரசின் சார்பாக நிவர்த்தி செய்கிற வேலையாக இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ