)
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு பாஜகவின் தலைவராக செயல்பட்டு வந்தார் அண்ணாமலை. இவரது தலைமையில் தமிழக பாஜக குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றது என்றும் சொல்லலாம். பல்வேறு போராட்டங்கள், நடைபயணம், திமுக எதிர்ப்பு என்று தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்தார். அதே சமயத்தில் அண்ணாமலைக்கு இளைஞர்களின் செல்வாக்கும் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் தற்போது தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இது பதவிக்காலம் முடிந்தவுடன் நடைபெறும் மாற்றம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமியின் அழுத்தத்தால் தான் தமிழக பாஜக தலைவர் மாற்றப்பட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்த வருகிறது. அண்ணாமலையை மாற்றினால் தான் கூட்டணிக்கு சம்மதிப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததால் தற்போது நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. நயினார் அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் அதிமுக பொறுப்பாளர்களுடன் இணைந்து தேர்தலில் பணி புரிவார் என்று இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு என்ன பதவி?
அதிமுக - பாஜக கூட்டணியின் போது சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால் அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என்றும், அதன் பிறகு முக்கிய துறையில் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆந்திராவில் இருந்து எம்பி ஆக தேர்வாகிறார் என்றும் தகவல் வெளிவர தொடங்கியது. தமிழகத்தில் அதிமுக தரப்பில் ஒரு மாநிலங்களவை எம்பி இருக்கும் நிலையில், அது அண்ணாமலைக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அதிமுக சார்பில் அண்ணாமலை எம்பி ஆக மாட்டார் என்றும் கூறப்பட்டது.
ஏற்கனவே அந்த எம்பி பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. தேமுதிக நீண்ட நாட்களாக அதனை கேட்டு வரும் நிலையில் அதிமுக அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் தற்போது ஆந்திராவில் இருந்தும் அண்ணாமலையின் எம்பி வாய்ப்பு பறிபோகி உள்ளது. அங்குள்ள ஒரு எம்பி சீட்டில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி சார்பில் பாஜகவின் வெங்கட் சத்ய நாராயணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் அண்ணாமலைக்கு இன்னும் அதிகாரம் மிக்க பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இது ஒரு கௌரவ பதவி என்றும் சொல்லலாம். அண்ணாமலைக்கு கவர்னர் வாய்ப்பு எல்லாம் வழங்கப்பட பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும், ஆனால் அண்ணாமலை தரப்பில் தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக இருக்க விரும்புவதாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ