Annamalai Latest News Updates: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், உச்சநீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வெவ்வேறு உத்தரவுகள்
மேலும், அவர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை இன்று வெளியிட்ட நான்கு வெவ்வேறு வழக்குகளின் உத்தரவுகளை குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசை சாடி உள்ளார். கிட்னி திருட்டு விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம், கரூர் கூட்டநெரிசல் விவகாரம் மற்றும் திருப்பரங்குன்றம் வழக்கு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள உத்தரவுகளை அவர் ஒவ்வொன்றாக குறிப்பிட்டுள்ளார்.
கிட்னி திருட்டு விவகாரம்
அதில் முதலாவதாக, "திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது" என குறிப்பிட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
இரண்டாவதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குறித்து, "பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள்.
1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து…
— K.Annamalai (@annamalai_k) October 10, 2025
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்
தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை குறிப்பிட்ட அண்ணாமலை, "கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது" என சுட்டுக்காட்டினார்.
கடைசியாக, "திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, நீதியரசர் ஸ்ரீமதி அவர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதை தடை செய்து 3வது நீதிபதியான நீதியரசர் விஜய் குமார் உத்தரவிட்டார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு!
மேலும் படிக்க | காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









