சீனாவில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது மறக்க முடியாதது-ஸ்கேட்டிங் வீரர் அவிக்ஷித் விஜய்

2024 ஆம் ஆண்டிற்கான  ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் "Chariot Awards" விழாவில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் பங்கேற்று விருதுகள் வழங்கினார். 

Written by - Yuvashree | Last Updated : Feb 5, 2024, 05:28 PM IST
  • சேரியட்ஸ் விருது விழா நடைப்பெற்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவிஷித் விஜய் தங்கம் வென்றார்.
  • இது குறித்து அவர் பேசியுள்ளார்.
சீனாவில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது மறக்க முடியாதது-ஸ்கேட்டிங் வீரர் அவிக்ஷித் விஜய்

2024 ஆம் ஆண்டிற்கான  ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட் "Chariot Awards" விழாவில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் பங்கேற்று விருதுகள் வழங்கினார். ஒவ்வோராண்டும் ரோட்டரி மெட்ராஸ் சவுத் வெஸ்ட்,  வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர்,  கௌரவம், கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில்  "Chariot Awards" வழங்கி சிறப்பித்தது வருகிறது. 

Add Zee News as a Preferred Source

சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விருது விழாவில், இந்த ஆண்டிற்கான 5 விருதுகளை இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததார் முன்னிலையில்  வழங்கப்பட்டன. அந்த வகையில் மெட்ராஸ் டிஸ்லெக்சியா சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகருக்கு கௌரவத்திற்கான  Chariot Award வழங்கப்பட்டது.  

மேலும் படிக்க | திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு ஆர்வமுடன் கோரிக்கைகளை அனுப்பும் மக்கள்!

வொகேஷனல் எக்ஸலன்ஸ் விருது விஜய் கார்மென்ட்ஸின் நிர்வாக இயக்குநர், ரொட்டேரியன் டி.விஜயகோபால் ரெட்டிக்கும்,   வாழ்நாள் தொழிற்துறை சாதனையாளர் விருது சங்கர நேத்ராலயா போர்டு ஆஃப் கவர்னர் மருத்துவர். லிங்கம் கோபாலுக்கும் வழங்கப்பட்டது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏஸ் ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற அவிக்ஷித் விஜய் விஸ்வநாத்திற்கு விளையாட்டிற்கான  விருதும்,  கர்நாடக பாடகி,  ஸ்ரீவித்யா வாசுதேவனுக்கு கலைக்கான  "Chariot Awards" வழங்கப்பட்டன. விருது பெற்ற ஒவ்வொருவரும்  தங்கள் எண்ணங்களையும், வாழ்நாள் பயணத்தையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்

இந்த  "Chariot Awards" நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக ரொட்டேரியன் சுரேஷ் ஜெயின், கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ரொட்டேரியன்கள் மஞ்சு குல்கர்னி, மகேஸ்வரன், ஹரிஷ் மகாதேவன், குல்தீப் சேத்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருது பெற்றபின் பேட்டியளித்த ஏஸ் ஸ்கேட்டிங் வீரர், அவிக்ஷித் விஜய்  "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற போது சீனாவில் இந்திய தேசிய கீதம் ஒலித்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்றார். தற்போது தமிழ்நாட்டில் ஸ்கேட்டிங் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும் அதனை இன்னும் மேம்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், இந்த சின்ன வயதில் ரோட்டரி மெட்ராஸ் சௌத் வெஸ்ட் சேரியட் விருது பெற்றதற்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும்" நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். 

மேலும் படிக்க | தனிச் சின்னம் என்கிற கேள்விக்கு இடமில்லை: மதுரையில் ஓபிஎஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News