ஒச்சேரி சுயம்புநாதர் கோவில்: பாலாலயம் நிறைவு, பக்தர்கள் மகிழ்ச்சி

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புநாதீஸ்வரர் ஆலயத் திருப்பணி: ஒச்சேரியில் பாலாலயம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 10, 2025, 01:29 PM IST
  • இக்கோயில் திருப்பணிகளுக்காக ரூ.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • கடந்த மார்ச் மாதம் ஆலய வளாகத்தில் பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது.
  • வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை.
ஒச்சேரி சுயம்புநாதர் கோவில்: பாலாலயம் நிறைவு, பக்தர்கள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம், ஒச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, அருள்மிகு ஸ்ரீ காமாட்சி சமேத சுயம்புநாதீஸ்வரர் திருக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

Add Zee News as a Preferred Source

காலத்தால் மிகவும் சிதிலமடைந்து காணப்படும் இந்த ஆலயத்தை சீரமைத்துப் புதுப்பித்து, மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் திருப்பணிகளுக்காக ரூ.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகளைத் தொடங்கி வைக்கும் விதமாக, கடந்த மார்ச் மாதம் ஆலய வளாகத்தில் பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடந்தேறியது.

8 மாத கால தாமதத்திற்குப் பிறகு நடைபெற்ற பாலாலயம்

பூமி பூஜை நடைபெற்று சுமார் எட்டு மாதங்கள் ஆகியும், ஆலயத்தின் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், முதற்கட்டப் பணிகள் தொடங்குவதற்கான முக்கியமான நிகழ்வான சிவனாலய பாலாலயம் நேற்று (நவம்பர் 9-ம் தேதி) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அண்ணாமலை, திமுக காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி, ஆலய அறங்காவலர் குழு தலைவர் தயாளன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி சரவணன், மோகன், ஆலயத் திருப்பணிக் குழுவினர், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் கவலை: கும்பாபிஷேகத்திற்கு இன்னும் எத்தனை மாதங்கள்?

பூமி பூஜை நடத்தப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னரே பாலாலயம் நடைபெற்றுள்ளதால், ஆலயப் பராமரிப்புப் பணிகள் துவங்குவதில் ஏற்படும் தாமதத்தை எண்ணி பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். "தாமதமாகத் தொடங்கியுள்ள இந்தப் பணிகள் நிறைவுபெற்று, கும்பாபிஷேகத்தைக் காண இந்தத் திருக்கோவில் இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்குமோ?" என்ற கேள்வி பக்தர்களின் மனதில் எழுந்துள்ளது.

அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே ஒச்சேரி பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி : அதிகாரப்பூர்வ விடை குறிப்புகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்?

மேலும் படிக்க | பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய அறிவிப்பு - புற்றுநோய் வராது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News