சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் குப்பைகளை அதிகளவில் எரித்து வருவதால் சென்னை நகரமே புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போகி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பழைய பொருட்களை மக்கள் எரித்து வருகின்றனர். சென்னையில் நள்ளிரவு முதலே குப்பைகளை மக்கள் எரித்து வருகின்றனர். போகி பண்டிகை குப்பைகள் எரிக்கப்படுவதால் சென்னை நகரமே புகை மூட்டமாக காணப்படுகிறது.


சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போகி கொண்டாட்டம் காரணமாக மக்கள் குப்பைகளை எரித்து வருகின்றனர். இதனால் காற்றில் மாசு அதிகரித்து, பல இடங்களும் கரும்புகையால் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பாலானோர் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்ட படியே செல்வதை காண முடிந்தது.