பள்ளி மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை.. சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு வலைவீச்சு!

கோவை அருகே 9ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 20, 2025, 08:50 PM IST
  • கோவை அருகே பள்ளி மாணவி கர்ப்பமாகி உள்ளார்
  • அந்த மாணவியை திருமணம் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்
பள்ளி மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை.. சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு வலைவீச்சு!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  பெண் குழந்தை பிறந்தது. ஆனால்  அப்பெண் சிறுமி போல் தெரிந்ததால் அவரது வயதை மருத்துவர்கள் விசாரித்து உள்ளனர். அப்போது அவருக்கு வயது 16 என தெரியவந்ததுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேரில் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமி 9ம் வகுப்பு படித்து உள்ளார். அவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (22) என்பவரும் காதலித்து உள்ளனர். இரு வீட்டாரின் சமதத்துடனும் திருமணமும் செய்துள்ளனர். அவர்களும் பெண்ணின் வயதை யோசிக்காமல் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

திருமணத்திற்கு பிறகு கோபால கிருஷ்ணன் வீட்டில் அந்த மாணவி வசித்து வந்து உள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. பள்ளியிலும் மாணவி தாலியுடன் இருப்பதை யாரும் கவணிக்கவில்லை. இதற்கிடையே 9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகி உள்ளார். கர்ப்பம் காரணமாக அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். வீட்டிலேயே அவர் பிரசவத்திற்கு தயாராகி வந்து உள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு பேறுகால வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து, அவர்களது பெற்றோர் மாணவியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு அவருக்கு பிரசவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கோபால கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 

மேலும், சிறுமி திருமணம் செய்தது பள்ளி நிர்வாகத்துக்கு எப்படி தெரியாமல் போனது? கர்ப்பம் அடைந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அவரின் வயதை எப்படி, மருத்துவர்கள் கவனிக்காமல் விட்டனர் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.  9 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதே ஆன சிறுமிக்கு திருமணம் ஆனது மட்டுமல்லாமல் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிங்க: என் குழந்தைக்கு நீ தான் அப்பா.. மறுத்தால் கொன்றுவிடுவேன்.. கணவனை மிரட்டிய மனைவியால் பரபரப்பு!

மேலும் படிங்க: ஆசிரியர் மீது பொய் பாலியல் வழக்கு தொடுத்த மாணவி! 7 வருடங்களுக்கு பின்பு வெளியான உண்மை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News