"காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு" நெல்லை அரிவாள் வெட்டு சம்பத்தில் அண்ணாமலை வருத்தம்!

தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Apr 15, 2025, 06:07 PM IST
  • திருநெல்வேலியில் பள்ளி மாணவனை சக மாணவனை வெட்டினார்
  • இந்த விவகாரத்திற்கு பாஜகவை சேர்ந்த அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்
"காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு" நெல்லை அரிவாள் வெட்டு சம்பத்தில் அண்ணாமலை வருத்தம்!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8வது மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டினான். அதனை தடுக்க சென்ற ஆசிரியரையும் தாக்கி உள்ளான். இதில் காயமடைந்த மாணவன் மற்றும் ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாவது, திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. தவறான மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு, இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, நமது குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது என்றால், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே இதற்கு பொறுப்பு. 

பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது திமுக அரசு. மேலும், உச்ச வரம்பு வைத்து அரசே மது விற்பனை செய்வதாலும், பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும். 

பள்ளி ஆசிரியர்களால் தங்கள் பணிச்சுமைகளைக் கடந்து, அத்தனை குழந்தைகளையும் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கே நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண்காணிப்பில் வளர்ப்பது, சமூகத்திற்குச் செய்யும் முக்கியமான கடமை என்பதை உணர்வது நன்று என தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி... 2வது முறையாக வாய் திறக்காத ஜெயக்குமார் - மழுப்பல் பதில்!

மேலும் படிங்க: நெல்லையில் பென்சில் கேட்டதால் தகராறு.. பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News