டிவியில் வருவதற்கு என்ன வேணாலும் பேசலாமா? திருமாவை கண்டித்த நயினார்!

தொலைக்காட்சியில் வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று திருமாவளவனை சுட்டி காமித்து நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Apr 28, 2025, 07:51 AM IST
  • மக்களுக்கு அனைத்தும் மத்திய அரசு செய்யும்.
  • ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார்?
  • கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று.
டிவியில் வருவதற்கு என்ன வேணாலும் பேசலாமா? திருமாவை கண்டித்த நயினார்!

தொலைக்காட்சியில் வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று திருமாவளவனை சுட்டி காமித்து நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். திண்டுக்கல்லிற்கு வருகை தந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்திக்க நேற்று வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என செல்வ பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று.

மேலும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம்!

எல்லோருக்கும் எல்லாம் என்ற உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு, எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் சொல்வது முக்கியமில்லை எல்லோருக்கும் கிடைப்பது மாதிரி செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து. அதில், நாங்கள் கருத்து சொன்னால் சரியாக இருக்காது. அது அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையேயான பிரச்சனை.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பூத் கமிட்டி மீட்டிங் குறித்த கேள்விக்கு, இந்திய திருநாட்டில் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் நாம் கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். இலை மீது தாமரை மலரும் என்பது குறித்த கேள்விக்கு, இலையும், தாமரையும் கூட்டணியாக சேர்ந்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது அர்த்தம். தாமரைப்பூ உள்ளது என்றால் கீழே இலை இருக்கத்தான் செய்யும். நீங்கள் கேள்வி கேட்கும் முன்பு நான் பதில் கூறுகிறேன். இட ஒதுக்கீடு குறித்து இபிஎஸ் மற்றும் அமித்ஷா பேசிக்கொள்வார்கள். திமுக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது முதலில் அகற்றப்பட வேண்டும். பழைய கதையை திண்டுக்கல்லில் புதிதாக பூட்டை திறக்கிறீர்கள்.

காஷ்மீர் குறித்து திருமாவளவன் கருத்து கூறுவது குறித்த கேள்விக்கு, அனைவருக்கும் நாட்டு பற்று என்பது வேண்டும். தேசப்பற்று தேச உணர்வு என்பது வேணும். அதை புரிந்து கொண்டு எல்லா தலைவர்களும் நாட்டின் நன்மை கருதி பேச வேண்டும். தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. தெலுங்கானா முதல்வர் பேசுவதை பார்த்தீர்களா? பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும். பாரத பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு தர வேண்டும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தேச உணர்வுக்காக பேசுகிறார். ரேவந்த் ரெட்டி போன்ற நபர்களுக்கு எனது வணக்கங்கள்" என தெரிவித்தார்.

மேலும் படிங்க: தமிழகத்தில் ஓய்வூதியம் தொடர்பாக முக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News