எஸ்.வி.சேகர் மீது சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி.சேகரின் வாடிக்கை என்ற ஆதாரங்களை பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 18, 2022, 02:47 PM IST
  • அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடு
  • சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி
  • விசாரணை 22ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
எஸ்.வி.சேகர் மீது சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி title=

பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுனராக இருந்தபோது ஆளுநர் மாளிகையில் பெண் பத்திரிகையாளர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவிய தகவலை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மறுபதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.

SV Sekar

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பெண் நிருபர்களை பேசிய விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

Highcourt

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார் அளித்திருந்த தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி. சேகர்  சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை அவர் ரிடிவீட் செய்துள்ளதாகவும் அதனை நீக்கியுள்ளதாகவும் கூறி அதற்கான பதிவுகளை தாக்கல் செய்யப்பட்டன. 

மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி மற்ற பதிவுகளை அவர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்று கொள்ளலாம், ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்று கொள்ள முடியாது என்றும்,  சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இதுபோன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எஸ் வி.சேகர் விளக்கமளிக்க உத்தரவிட்டுவழக்கு விசாரணை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். 

மேலும் படிக்க | ஆளுநருடன் சுமூக உறவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News