Chennai Suburban Railway News: எழும்பூர் டூ கடற்கரை இடையே நான்காம் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதால், புதிய தண்டவாளம் அமைக்கும் பணி காரணமாக புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Chennai Electric Train's Canceled: சென்னையில் இன்று கடற்கரை கோடம்பாக்கம் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எழும்பூர் முதல் கடற்கரை இடையே நான்காம் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கடற்கரை மற்றும் கோடம்பாக்கம் இடையே புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக இயங்காது எனவும், கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலை 5 மணி 10 நிமிடங்கள் முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாலை 4 மணி 10 நிமிடங்களுக்கு பிறகு வழக்கமான ரயில் சேவைகள் தொடரும் என கூறப்பட்டு உள்ளது.
மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வரை செல்லும் புறநகர் ரயில்கள் தாம்பரம் வரையும் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
11 மணி நேரத்திற்கு புறநகர் ரயில் சேவை பாதிக்கப்படுவதால் பயணிகள் வசதிக்காக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதேபோல மெட்ரோ ரயில்களும் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ