)
Chennai Police Recruitment : சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுள்ள இளமையும், ஊக்கமும் அர்ப்பணிப்பு பண்பும். பொதுநலத்தொண்டில் ஈடுபாடு கொண்டு சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
1. குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
2. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
3. 01.10.2025 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர். இரவு ரோந்து பணி பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.11.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.
முகவரி:
சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை,சென்னை-15 தொலைபேசி எண்: 9566776222,74186 81700
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் 31.10.2025 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். சென்னை, கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆண்டுக்கான மாணவியர் நேரடி சேர்க்கை, பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத கீழ்காணும் தொழிற்பிரிவுகளில் 13.10.2025 முதல் 31.10.2025 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவிகள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்து சேர்ந்துக்கொள்ளலாம்.
சேர்க்கை பெறும் மாணவியருக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து மற்றும் இரயில் பயணச் சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- மற்றும் விலையில்லா வரைபட கருவிகள், தகுதியுள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டதின் கீழ் ரூ. 1000/- மாதாந்திர உதவித்தொகை என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
கல்வி தகுதி :-
8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி
தேவைப்படும் ஆவணங்கள்:-
1. மாற்றுச் சான்றிதழ்.
2. மதிப்பெண் சான்றிதழ்.
3. சாதிச்சான்றிதழ்,
4. வருமான சான்று
5. புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல்.
தொழிற்பிரிவு :- Computer Aided Embroidery and Designing (SCVT) -Disability Type
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்தவுடன், தொழிற்பழகுநர் பயிற்சியும், பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளதால் மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை 044-22510001, 9499055651 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ