மனைவியின் முன்... ரவுடி தொண்டை ராஜ் ஓட ஓட வெட்டிக்கொலை - சென்னையில் பரபரப்பு

Chennai Crime News: சென்னை வியாசர்பாடியின் பிரதான சாலையில் மனைவி கண் முன்னே தொண்டை ராஜ் என்ற ரவுடியை ஓட ஓட ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 20, 2025, 08:13 PM IST
மனைவியின் முன்... ரவுடி தொண்டை ராஜ் ஓட ஓட வெட்டிக்கொலை - சென்னையில் பரபரப்பு

Chennai Crime News: சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தொண்டை ராஜ். கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து ஒரு மாதத்துக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என கூறப்படுகிறது. 

அவர் தனது மனைவியுடன் மணலி பகுதியில் வாழ்ந்து வந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மணலியில் இருந்து வியாசர்பாடியில் உள்ள தன் அம்மாவை பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஜங்ஷன் அருகே அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து ஓடினர்.  சம்பவ இடத்திற்கு வந்த எம்கேபி நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News