Coimbatore News: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த டெய்லர் ராஜா தற்போது கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Coimbatore Latest News Updates: கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பாஜக தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர்.
Coimbatore News: கோவை தொடர் குண்டுவெடிப்பு
கோவையில் நடத்தப்பட்ட இந்த கொடூரமான தொடர் குண்டுவெடிப்பு (Coimbatore Bomb Blast) சம்பவத்தில் மொத்தம் 58 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததனர். கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 168 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, சிறை தண்டனை வழங்கப்பட்டது. அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Coimbatore News: 29 ஆண்டுகளாக தேடப்பட்ட டெய்லர் ராஜா
குண்டுவெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா (Tailor Raja), முஜிபூர் ரகுமான், அயூப் ஆகிய 3 பேர் இதுவரை கைது செய்யப்படாமல் இருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு இவர்கள் குறித்து தகவல் கொடுத்தால், ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் தகவல் அளிப்பவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
Coimbatore News: சத்தீஸ்கரில் பிடிபட்ட டெய்லர் ராஜா
இந்நிலையில், கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாக பதுங்கி இருந்த சாதிக் ராஜா (எ) டைலர் ராஜாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட அவரை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Coimbatore News: கோவையில் விசாரணை
கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வரப்பட்ட டெய்லர் ராஜாவிடம் தற்போது அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் கர்நாடக மாநிலம் விஜயாபூரில் டெய்லர் ராஜா கைது செய்யப்பட்டதாக தீவிரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 29 ஆண்டுகளாக எந்த வழக்கிலும் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் டெய்லர் ராஜா தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
Coimbatore News: கர்நாடாகவில் கைது... 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
1998ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு மட்டுமின்றி 1996ஆம் ஆண்டு ஜெயிலர் பூபாலன் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டது. அதே ஆண்டு நாகூரில் சயீதா கொலை செய்யப்பட்ட வழக்கு, 1997ஆம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெய பிரகாஷ் கொலை வழக்கிலும் டெய்லர் ராஜா தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வெர்ஜின் வெஸ்டா முன்பு கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜா ஆஜர்படுத்தபட்டார். டெய்லர் ராஜாவிற்கு 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி வெர்ஜின் வெஸ்டா உத்தரவிட்டார். முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு காவல்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ