)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வருகை தந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம். அதனாலேயே எங்களை சங்கீகள் என சொல்கிறார்கள், அதற்கு நாங்கள் கவலைப்படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் வங்கிகளின் சக்தி அதிகமாகிறது. அமித்ஷா மதுரை வருகை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. புதிய நிர்வாகிகளுக்கு புதிய ரத்தத்தை பாச்சுவதற்காக அமித்ஷா வருகை தருகிறார். அவரது வருகை எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது, திமுக கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது.
உண்மையான திமுகவினருக்கு பக்திகள் இருக்கிறது முதல்வர், துரைமுருகன் அனைவருமே சாமி கும்பிடுகிறார்கள். மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள். முருகன் மீது பக்தி கொண்டவர்கள் நிச்சயமாக வருவார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு குடமுழுக்குயிலாவது தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டாரா? கிறிஸ்துமஸ் பங்க்ஷனில் பங்கு பெற்றாரே எனக் கேள்வி எழுப்பினர். கோவில் உள்ள தீபத்திற்கும் உங்களுடைய ஸ்டிக்கர் ஓட்டுகிறீர்கள் இதை கடவுள் இதை மன்னிக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை வந்த அமித்ஷா
மதுரையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மதுரை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் தங்கு விடுதிக்கு வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில பகுதி மற்றும் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமான மூலமாக புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதிக்கு வந்தடைந்தார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரில் பின்புற இருக்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அமர்ந்தபடி தங்குவிடுதிக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், மீண்டும் 12 மணிக்கு சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கி விடுதிக்கு வந்தடைந்து, அங்கு பாஜக நிர்வாகிகள் தொழிலதிபர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனையடுத்து மாலை 4 மணிக்கு மேல் மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறவுள்ள பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற்ற பின்னர், மீண்டும் மதுரை விமான நிலையத்துக்கு சென்றடைந்து அங்கிருந்து டெல்லி புறப்படவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் தங்கியுள்ள தங்கு விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்த அரசியல் நகர்வாக மத்திய உள்துறை அமைச்சர் மதுரைக்கு வந்தடைந்துள்ள நிலையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை உள்துறை அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ