சவுக்கு சங்கரின் வீட்டில் மனிதக் கழிவுகளை கொட்டியது அநாகரித்தின் உச்சம் - தொல் திருமாவளவன் கண்டனம்

சவுக்கு சங்கரின் வீட்டில் மனிதக் கழிவுகளை கொட்டியது அநாகரித்தின் உச்சம் என தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Mar 24, 2025, 08:53 PM IST
  • சென்னையில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் சிலர் மனித கழிவுகளை கொட்டி உள்ளனர்
  • இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சவுக்கு சங்கரின் வீட்டில் மனிதக் கழிவுகளை கொட்டியது அநாகரித்தின் உச்சம் - தொல் திருமாவளவன் கண்டனம்

சவுக்கு சங்கர் தூய்மைப்பணியாளர்களை அவதுராக பேசி வீடியோ வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்டோர் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு அவரது வீட்டில் மனிதக் கழிவுகளை ஊற்றினர். 

இச்சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது; "இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறது. 

நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.  

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன்.   ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர்.    9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை" என தெரிவித்திருந்தார். 

மேலும் படிங்க: கூச்சமே இல்லாத இபிஎஸ்... இஸ்லாமியர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - ஸ்டாலின் பேச்சு

இந்த நிலையில், இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தொல் திருமாவளவன் கூறியிருப்பதாவது, "சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த  அதிர்ச்சியளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. எனினும், இது அநாகரித்தின் உச்சம். 

அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: துணை முதல்வர் துரோகி தானாம்... 'மன்னிப்பு கேட்க முடியாது' என காமெடியன் குனால் திட்டவட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News