Edappadi Palanisamy: பரப்புரையையின் போது ஆம்புலன்ஸ் வந்ததால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வருபவர்கள் நோயாளியாக அதே ஆம்புலன்ஸில் செல்ல வேண்டி வரும் என்றார்.

AIADMK Edappadi Palanisamy Latest News: அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 33வது நாளாக நேற்று (ஆகஸ்ட் 18) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்தார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணைக்கட்டு பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக ஆம்பலன்ஸ் வந்துவிட்டதால் பேச்சை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸிற்கு வழி விட கூறினார். அப்போது ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை என தெரிய வந்தது. இதனால், கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம்புலன்ஸை விட்டு பிரச்சனை செய்துகொண்டு இருக்கீர்கள். இப்படி ஒரு கேவலமான அரசாங்கம். இந்த ஆம்புலன்ஸ் எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த ஆம்புலன்ஸில் நோயாளியே செல்லவில்லை. இதுபோல முப்பது கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் விடுகிறார்கள். இதுபோல அடுத்த முறை கூட்டத்திற்கு ஆம்புலன்ஸை விட்டால், அதை ஓட்டி வருபவர் நோயாளியாக மாறி அதே ஆம்புலன்ஸின் செல்ல வேண்டி வரும்" என எச்சரித்தார். மேலும், "தாம்பரம் சீனி எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டு நாளை புகார் அளியுங்கள்" என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, "மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும். விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்ந்துவிட்டதால் இனிமேல் வீடுகளை கனவில் கட்டிப் பார்த்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. வறட்சி நிவாரணம் அளித்த அரசாங்கம் இந்தியாவிலேயே அதிமுக அரசாங்கம்தான்.
ஒரு திட்டமாவது திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு கொடுத்துள்ளார்களா...? அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு, விவசாய தொழிலாளிகளுக்கு, மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். வர உள்ள தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு, பெண்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு அதிக திட்டங்கள் வெளியிடப்படும். எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்றுகின்ற ஒரே கட்சி திமுகதான்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கொடுக்காமல் தற்போது மகளிர் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருவதாக நாடகம் நடத்துகிறார்கள். இது மகளிர் நலனுக்காக அல்ல வருகின்ற தேர்தலில் ஓட்டுக்காக தான்... 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்தப்படும் என திமுக கூறினார்கள், ஆனால் தற்போது 50 நாளாக குறைந்துவிட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் திமுக அரசாங்கம் கூலி கொடுக்கவில்லை, மத்திய அரசாங்கத்திடம் போராடி பெற்று அதிமுக தான் வாங்கி கொடுத்தது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. அதிமுக மக்களுடைய கட்சி. அணைக்கட்டு தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டும். கூட்டணி கட்சிக்கு கொடுத்தால் அவர்கள் வெற்றி பெற உழைக்க வேண்டும்" என பேசி முடித்தார். இரவு ஒன்பது மணிக்கு பரப்புரை மேற்கொள்வதாக இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணைக்கட்டு பகுதிக்கு 10 மணிக்கே வந்தார். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பாக பாதிக்கும் மேற்பட்டவர்கள் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ