)
எம்ஜிஆரையும், அண்ணாவையும் கொச்சைபடுத்தி அண்ணாமலை பேசியதால் யாரையும் கேட்காமல் எடப்பாடி அவர்கள் உங்கள் மாநில தலைவர் எங்கள் தலைவரை கொச்சை படுத்துகிறார். எனவே பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என கூறிய ஆண்மகன் எடப்பாடியார் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் அதிமுக கிழக்கு மாவட்ட சார்பில் அண்ணாதுரையின் 117வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அதிமுகவை அழித்துவிடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என புரட்சி தலைவர் நினைத்ததை போல இந்த கட்சியை ஆட்டி விடலாம். அசைத்து விடலாம் என நினைத்து கொண்டு இருக்கின்றனர். அண்ணாதுரை இறந்தபின் எம்.ஜி.ஆர் காலை பிடித்து, கெஞ்சி, கூத்தாடி முதல்வராக வேண்டும் என கேட்டவர் கருணாநிதி. அப்போது எம்.ஜி.ஆரின் தயவால் மட்டும் தான் முதல்வரானார். அ.தி.மு.க-வை பா.ஜ.க விடம் அடகு வைத்து விட்டார்கள் என ஸ்டாலின் சொல்கிறார். தி.மு.க., பா.ஜ., வுடன் இருந்தால் நல்ல கூட்டணி, நாங்கள் வைத்தால் கெட்ட கூட்டணியா.
தமிழகத்திற்கு உதவி வேண்டுமென்றால் மத்திய அரசை அனுசரித்து போக வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், இந்தியா முழுவதும் ஒரு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹிந்தியை படிக்க வேண்டுமென நாங்கள் திணிக்கிறோம் என சொல்லவில்லை. எனவே, சட்டதிட்டத்தின்படி பணத்தை கொடுக்க முடியவில்லை. ஆனால், தி.மு.க., அமைச்சர்கள் தவறாக கூறி அரசியல் செய்கின்றனர் என்றார். இன்று முதல் ஜி.எஸ்.டி., வரி குறைந்திருக்கிறது. இதனை ஒரு மாதத்திற்கு முன்பே பிரதமர் மோடி தீபாவளி பரிசு என தெரிவித்திருந்தார். பல ஆயிரம் கோடிகள் போனாலும் பரவாயில்லை என பல கோடி மக்களுக்கு நன்மை செய்துள்ளார் பிரதமர் மோடி.
உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று இந்தியா சார்பில் சமாதனமாக, அன்பாக இருங்கள் என பிரதமர் சொல்கிறார். இதையெல்லாம் நாங்கள் பாராட்டினால் எதிர்க்கின்றனர். பா ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க., தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் அண்ணாதுரை பற்றி தவறாக பேசியதால் டெல்லிக்கு சென்று உங்கள் மாநில தலைவர் எங்கள் தலைவர்களை தவறாக பேசிவிட்டார் எனக்கூறி உடனடியாக கூட்டணியை முறித்த ஆண்மகன் பழனிச்சாமி எனவே, எப்போது கேள்வி கேட்க வேண்டுமோ, அப்போது கேட்போம். பொதுச்செயலர் பழனிசாமி தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். ஒவ்வொரு தொகுதி பிரச்சனைகளையும், வணிகர்கள், விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார்.
பொதுச்செயலர் பழனிசாமியிடம் குறைகளை தெரிவிக்கும் வணிகர்கள் உள்பட பலரை , தி.மு.க., தலைவர்கள் மிரட்டுகின்றனர். வால் போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர். பதவியிலிருந்து விலக்கிவிடுவோம் என கூறுகின்றனர். நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, படிப்பு செலவையும் ஏற்றார் பொதுச்செயலர் பழனிசாமி. தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் திருடப்படுகிறது. ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ. 1000 கொடுத்தனர். அதற்கு காரணம் அ.தி.மு.க., தான். நாங்கள் வாக்குறுதி என்னாயிற்று கேட்டபின் தான் கொடுத்தது தி.மு.க. 58 மாதங்கள் ஒன்றும் செய்யாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என வந்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ