)
Edappadi Palanisamy In Pasumpon: பசும்பொனில் உள்ள முத்துராமலிங்கனார் நினைவிடத்தில் அதிமுக பொதுசெயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது அறிவித்தார். சட்டமன்ற வளாகத்தில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்தை நிறுவியவர், ஜெயலலிதா. பசும்பொன் முத்துராமலிங்க 13 கிலோ தங்கக் கவசம் வழங்கியவர் ஜெயலலிதா.முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.
தேசியமும் தெய்வீகமும் தனது
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 30, 2025
இரு கண்களாகப் போற்றி வணங்கி,
தேச விடுதலைக்காக பெரும் படையைத் திரட்டிய தென்னாட்டுச் சிங்கம்,
வீரம், விவேகம், உண்மை, உறுதி ஆகியவற்றைத் தன் கொள்கையாகக் கொண்டு பொதுவாழ்வில் மிளிர்ந்த அரசியல் பேராளுமை,
ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற
தனது வாழ்நாளை… pic.twitter.com/sjKEC6J3hy
மதுரையில் இருந்து ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்கு பயணம் செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தெரியவில்லை என பதிலளித்தார். மதுரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்குச் சென்றனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பழனிசாமி உத்தரவிட்டார். அவரது ஆதரவாளர்களின் பொறுப்பும் பறிக்கப்பட்டது. அதிமுக ஒன்றிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பசும்பொன்னில் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகிய மூன்று பேரும் சந்தித்து பேசினர். மூன்று பேரும் மரியாதை செலுத்திய பின்னர், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும், தாங்கள் ஜெயலலிதாவின் தொண்டராக இணைந்துள்ளோம் என்றும் மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் டிடிவி தினகரன் பேசியது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ