போலீஸ் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி..!! எங்கு நடக்கிறது தெரியுமா? - முழு விவரம்

Tamil Nadu Government : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருக்கும் போலீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு மிகப்பெரிய குட்நியூஸ் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 24, 2025, 05:21 PM IST
  • விரைவில் நடக்க இருக்கும் போலீஸ் தேர்வு
  • கள்ளக்குறிச்சியில் இலவச பயிற்சி வகுப்புகள்
  • தேவைப்படுவோர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்
போலீஸ் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி..!! எங்கு நடக்கிறது தெரியுமா? - முழு விவரம்

Tamil Nadu Government, Free Police Exam Coaching: தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் போலீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்கும் நிலையில், அத்தகைய வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் இருந்தே இந்த தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளது.

கள்ளக்குதிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக பத்திய/ மாநில அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்று மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படை, மத்திய பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நில அளவைத்துறை, கருவூலத்துறை, நீதித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவத்துறை, புள்ளியியல்துறை மற்றும் காவல்துறை போன்ற துறைகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அறிவிக்கையில் காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகள மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான 1,299 காலிப்பணியிடங்களுக்கு நேரடி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnush.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 07.04.2025 முதல் 03.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட போட்டி தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 30.04.2025 முதல் வாரநாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகளும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எர் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குதிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு 28.04.2025-க்குள் தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04151 205422 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

இதேபோல், சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு வல்லமை அறக்கட்டளை மற்றும் TAF கோச்சிங் அகாடமி  (தென்காசி ஆகாஷ் பௌண்டேஷன்)  இணைந்து மதுரையில் தங்கும் வசதி மற்றும் உணவுடன் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்து வல்லமை அறக்கட்டளையின் நிர்வாகிகள் வள்ளியம்மை, உமாதேவி, அக்க்ஷதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த இலவச பயிற்சி குறித்து அவர்கள் கூறுகையில் "உதவி ஆய்வாளர் தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவியர்கள் வல்லமை அறக்கட்டளை அளிக்கக்கூடிய இலவச பயிற்சியில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வானது வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க 60 மையங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் கலந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய 100 மாணவர்கள் 100 மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் திருநங்கைகளும் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்" எனவும் தெரிவித்தனர்.

அறக்கட்டளை நிர்வாகி உமாதேவி கூறுகையில், "தமிழக காவல்துறையில் 1400 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், இதற்கான தேர்வு சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் கலந்து கொள்ளக்கூடிய சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்காக இலவச பயிற்சி அளிக்க உள்ளோம். இப்பயிற்சியில் சேர்வதற்காக தமிழ்நாடு முழுவதும் எப்ரல் 29 ஆம் தேதி 60 இடங்களில் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது, நுழைவுத் தேர்வில் வெற்றி பெறக்கூடிய 200 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மதுரை பெருங்குடியில் உள்ள மையத்தில் மூன்று மாத காலத்திற்கு தங்கும் வசதி மற்றும் உணவுடன் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மூன்று மாத பயிற்சியில் எழுத்து தேர்வுக்கான வகுப்புகளை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும் உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சி TAF கோச்சிங் அகாடமி பயிற்சியாளர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது" என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தின் நிலையை 1 நிமிடத்தில் தெரிந்து கொள்வது எப்படி?

மேலும் படிக்க | கோடை விடுமுறை வந்தாச்சு..! பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு

மேலும் படிக்க - குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: வருகிறது டிஏ அரியர் தொகை.... எப்போது, எவ்வளவு? கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News