)
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அறுபடை வீடு திருக்கோயில்கள் மற்றும் புரட்டாசி மாதத்தில் புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்கிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்ற அறிவிப்பின்படி தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடு திருக்கோயில்கள் ஆன்மிக பயணம் மற்றும் புரட்டாசி மாதத்தில் புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில்கள் ஆன்மிக பயணம் அரசின் சார்பாக இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின்படி மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலத்தின் சார்பாக புகழ்பெற்ற வைணவ அறுபடை வீடு முருகன் திருக்கோயில்களுக்கும், வைணவ திருக்கோயில்களுக்கும் ஆன்மிக பயணம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி பக்தர்கள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களிலும், மயிலாடுதுறை இணை ஆணையர் அலுவலகம், உதவி ஆணையர் அலுவலகம், கும்பகோணம் உதவி ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக அருகில் உள்ள அறநிலையத்துறை அலுவலகங்கள், திருக்கோயில் அலுவலகங்கள், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம் அலுவலகங்களில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்படி பயணம் மேற்கொள்வதற்கான நிபந்தனைகள் என்னவென்றால், இந்து மதத்தை சார்ந்தவர்காக இருத்தல் வேண்டும் எனவும், 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- மிகாமல் இருத்தல் வேண்டும், ஆன்மிக பயணத்திற்கு உடல் தகுதி சான்று அரசு மருத்துவரிடம் பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 25.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பயணம் எப்போது?
புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணமானது நான்கு கட்டங்களாக, அதாவது 20.09.2025, 27.09.2025, 04.10.2025, 11.10.2025 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளன.
மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ