)
இன்று முதல் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து முக்கிய விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதிக்க கூடிய இந்த மாற்றங்கள் பொருளாதார ரீதியிலும் பெரிய சுமையாக இருக்கலாம். இவை மக்களின் தினசரி வாழ்க்கையிலும் நேரடி தாகங்களை ஏற்படுத்தப்படும். எனவே பின்வரும் இந்த ஐந்து முக்கிய மாற்றங்களை நினைவில் கொள்வது அவசியம்.
சென்னையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டீ மற்றும் காபி விலை உயர்ந்துள்ளது. கடந்த முறை ரூபாய் 10 லிருந்து ரூபாய் 12 ஆக உயர்ந்த டீயின் விலை இன்று முதல் ரூபாய் 12 இல் இருந்து 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ரூபாய் 12 இல் இருந்து 15 ஆக விற்பனை செய்து வந்த காபியின் விலை இன்று முதல் ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் டீ மற்றும் காபி பிரியர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.
சென்னையில் வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 51 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள், உணவகம் வைத்துள்ளவர்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் உற்பத்தி செலவு சிறிது குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் இந்த மாதம் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தமிழகத்தில் உள்ள 38 சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. விக்கிரவாண்டி, சமயபுரம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ரூபாய் ஐந்திலிருந்து அதிகபட்சமாக ரூபாய் 395 வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொருள்களின் விலையிலும் மாற்றம் ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு இந்த சுங்க கட்டண உயர்வு காரணமாக கூடுதல் செலவு ஆகும் என்பதால் அதனை வாடிக்கையாளர்களிடமே பெறுவார்கள்.
எஸ்பிஐ வங்கியில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய அப்டேட் வந்துள்ளது. அதன்படி இன்று செப்டம்பர் 1 முதல் ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் பரிவர்த்தனைகளில் கிடைக்கும் ரிவார்டு பாயிண்டுகள் இனி கிடைக்காது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் தபால் துறையின் சேவைகளிலும் இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது அதன்படி வங்கி தொடர்பான திட்டங்கள், பண பரிமாற்றங்கள் மற்றும் அஞ்சல் வழி வசதிகளில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிவிலக்குகள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்வில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ