ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை: ஆலோசிக்கும் அரசு... கோவை பாலத்திற்கு பெயர் மாற்றமா?

EV Velu News: கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 9, 2025, 11:22 AM IST
  • ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் ஈபிஎஸ் - எ.வ.வேலு
  • ஸ்டாம்ப் சைஸில் கூட எம்ஜிஆர் படத்தைப் போடாதவர்கள் அதிமுக - எ.வ.வேலு
  • 36 பாலங்களை நிலம் எடுத்து கட்டி முடித்துள்ளோம் - எ.வ.வேலு
ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை: ஆலோசிக்கும் அரசு... கோவை பாலத்திற்கு பெயர் மாற்றமா?

Coimbatore Latest News Updates: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (அக். 9) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Add Zee News as a Preferred Source

ஈபிஎஸ் யோசிக்க வேண்டும்

இதனைத் தொடர்ந்து, கோவையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர், "முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி உள்ளவர், உழைத்தவர்களையும், தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர். ஆனால், எடப்பாடியார் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் அவர். 'சின்னம்மா, சின்னம்மா' என்று சொன்னவர் இப்போது அப்படிச் சொல்வதில்லை" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், "நோயாளி என்று சொல்வதற்குப் பதிலாக பயனாளி என்று சொல்வதில் என்ன தவறு? காலத்திற்கு ஏற்ப மொழி வளர்ச்சி அவசியம். ஆனால், எடப்பாடியாருக்கு அதைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லும் அவருடைய தமிழ் ஆற்றல் அவ்வளவுதான். முதல்வரைக் குறை கூறுவதற்கு முன் யோசிக்க வேண்டும்" என்று எ.வ.வேலு காட்டமாகப் பதிலளித்தார்

எம்ஜிஆர் படத்தை போடாத அதிமுக...

மேலும், பொது இடங்களுக்கு பெயர் வைப்பது குறித்து எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு விளக்கமளித்த அவர், "மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், கோவையில் பெரியார், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலையம்மாள், திருச்சியில் காமராசர், நெல்லையில் காயிதே மில்லத் என அனைத்து தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. பெயர் வைப்பதில் யாருக்கும் கருத்து இருக்கக் கூடாது. ஆனால், எம்ஜிஆர் பெயரைச் சொல்ல பயப்படுபவர்கள் எதிர்க்கட்சியினர். ஸ்டாம்ப் சைஸில் கூட எம்ஜிஆர் படத்தைப் போடாதவர்கள் அவர்கள்" என்று குற்றம்சாட்டினார்.

மாற்றாந்தாய் மனப்பான்மை...

தொடர்ந்து, "அதிமுக ஆட்சியில் 71 ரயில்வே பாலங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், நாங்கள் 36 பாலங்களை நிலம் எடுத்து கட்டி முடித்துள்ளோம். செம்மொழி பூங்காவை கலைஞர் அறிவித்தபோது, அதைச் செயல்படுத்தாதவர்கள் நீங்கள். ஆனால், ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததற்கு நடுநிலை மக்கள் பாராட்டுகின்றனர். அதிமுக அறிவித்த திட்டமாக இருந்தாலும், 5 சதவீதப் பணிகளை மட்டுமே முடித்திருந்தீர்கள். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது அதிமுக தான்" என்று குறிப்பிட்டார்.

ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை

ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, “பொதுவாக ஜி.டி.நாயுடு என்றே அவரை அழைப்பார்கள். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார். மேலும், அதிமுக கூட்டணி வலுபெறுவதாக இபிஎஸ் பேசியிருந்தது குறித்த கேள்விக்கு, "அதிமுகவின் கூட்டணி வலுவானதா, நஞ்சு போனதா, தோற்கும் கூட்டணியா என்பதைச் சொல்ல முடியாது. ஆனால், இந்த முறையும் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டின் மிக நீண்ட பாலமாக, கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் விளங்குகிறது. இந்த பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் என்றழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருப்பினும் சாதி பெயர் கொண்டவரின் பெயரை பொது இடத்திற்கு சூட்டக்கூடாது என தொடர் சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | விஜய் - அதிமுக கூட்டணி! பிள்ளையார் சுழி போட்டாச்சு! உறுதிப்படுத்திய பழனிசாமி?

மேலும் படிக்க | கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்! காவல்துறை சொன்ன முக்கிய தகவல்!

மேலும் படிக்க | ஓசூரில் புதிய விமான நிலையம்..! கொடிகட்டி பறக்கும் ரியல் எஸ்டேட்..! முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News