)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கனமழையால் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மீட்கும் வகையில் மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை சீர் செய்வதற்கு தேவையான உபகரண பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள் இவர்களுடன் ஆலோசனை நடத்தி மழைநீர் கால்வாயில் அடைப்பு இவைகளைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் பேரூராட்சி உதவி பொறியாளர் சுப்பிரமணி, தூய்மைப் பணி அலுவலர், மேற்பார்வையாளர்,பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டின் மழைப் பொழிவு என்பது பிரதானமாக இரண்டு பருவமழைக் காலங்களைச் சார்ந்துள்ளது. இந்த இரு பருவங்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவையான நீரை அளிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. தற்போது, தமிழ்நாட்டில் பெய்து வரும் மழையானது, வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
தென்மேற்குப் பருவமழை பொதுவாக ஜூன் மாதத்தின் மத்தியில் தொடங்கி, அக்டோபர் மாதத்தின் பாதி வரை நீடிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அமைப்புக் காரணமாக, இந்தப் பருவமழையானது பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழையைத் தரும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்கள் இந்த மழையின் மூலம் கணிசமான நீர்வரத்தைப் பெறுகின்றன. இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் ஒரு பகுதியாக இருந்தாலும், கேரள மாநிலத்தின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
அதேசமயம் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி, டிசம்பர் இறுதி வரை நீடிக்கும். வங்கக் கடலில் இருந்து ஈரப்பதத்தைத் தாங்கி வரும் இந்தக் காற்று, தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு அதிக மழைப்பொழிவை வழங்குகிறது. தமிழ்நாட்டின் மொத்த வருடாந்திர மழைப்பொழிவில், 48% முதல் 60% வரை இந்தப் பருவமழையே வழங்குகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மற்றும் உள் மாவட்டங்கள் இந்தப் பருவமழையின் மூலம் நல்ல மழையைப் பெறும். இந்த மழையே தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும், நிலத்தடி நீருக்கும் மிக முக்கிய ஆதாரமாக உள்ளது.
இதனிடைய தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி, மேற்கு மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு கிடைக்கிறது.
நாளை (24-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ