)
Tamil Nadu Government free house site patta : கரூரில் தனியார் மண்டபத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, நான்கு ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் 29263 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. மேலும், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி 5 ஆண்டுகளாக ஆட்சேபம் இல்லாத இடத்தில் குடியிருக்கும் 28041 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக 1275 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் ஆட்சியர் தங்கவேல், தலைமையில் மண்மங்கலம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, நான்கு ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் 29, 263 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. மேலும், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி 5 ஆண்டுகளாக ஆட்சேபம் இல்லாத இடத்தில் குடியிருக்கும் 28, 041 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் நிலையில் முதல்கட்டமாக 1275 நபருக்கு இன்று இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வாயிலாக 1,69,729 குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. 1588 மகளிர் சுயஉதவிக் குழுக்களில், 13,101 நபர்களுக்கு ரூ. 27.25 கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க 3,412 நபர்களுக்கு ரூ. 17.33 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
இதேபோல், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு விழா மற்றும் 124 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் 124 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். திருச்செங்கோடு ஒன்றியம், தண்ணீர்பந்தல் பாளையத்தில் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் சார்பில் 21.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தினை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
பின்னர், குமாரபாளையம் தட்டாங்குட்டை பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 124 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ