)
இந்தியாவில் பெண்களுக்கு அதிகமான நிதி உதவி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்திலும் மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம் என்று பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில், பெண்கள் பொருளாதார ரீதியாக தற்சார்பு பெற்று, தொழில்முனைவோராக வளர வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு கடனுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் இந்த திட்டத்தின் மூலம், சுய உதவி குழுக்களை (SHG) சேர்ந்த பெண்களுக்கு, அவர்கள் புதிய தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவோ ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது.
கடன் திட்டத்தின் நோக்கம்
சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் வழக்கமான கடன் இணைப்பு திட்டங்கள், சில பெரிய தொழில்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. இந்த குறையை போக்கி, வேளாண்மை சார்ந்த தொழில்கள், உணவு பதப்படுத்துதல், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் கால் பதிக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தில் வங்கியில் பெற்ற கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் பெண்களுக்கு, ரூ.1.5 லட்சம் வரையிலான நிலுவை கடனுக்கு, வட்டியில் 2 சதவீதம் மானியமாக வழங்கப்படும். வங்கிகள் வசூலிக்கும் கடன் உத்தரவாத கட்டணத்தையும் தகுதியுள்ள பயனாளிகள் திரும்ப பெறலாம். ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை இந்த கட்டணத்தை அரசு திரும்ப வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை எந்தவிதமான பிணையும் இல்லாமல் கடன் பெற முடியும் என்பது இதன் மிகப்பெரிய பலமாகும்.
யார் யாருக்கு கடன் கிடைக்கும்?
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் நகல் அவசியம். அதே சமயம் சுய உதவிக் குழுவின் தீர்மானம், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான ஆதாரம் மற்றும் விற்பனையாளர் குறித்த விவரங்கள் அவசியம். பிற தொழில்களுக்கு (உற்பத்தி, சேவை, வியாபாரம்) ஆதார், ரேஷன், வங்கி பாஸ்புக் மற்றும் பான் அட்டை நகல், தொழில் பதிவுச் சான்றிதழ் (உதயம் / FSSAI / GST), மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்கான Quotation ஆகியவை அவசியம்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள சுய உதவி குழு உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF), வட்டார அளவிலான கூட்டமைப்பு, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளையை நேரடியாக அணுகி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பெண்களின் தொழில் கனவை நனவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ