ஹாசினியை கொன்ற கொடூரன்... தாயை கொன்ற வழக்கில் விடுதலை - திடுக் பின்னணி!

Daswant Released: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக உள்ள தஷ்வந்த் அவரின் தாயை கொன்ற வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 30, 2025, 11:08 AM IST
  • 2017 பிப்ரவரியில் தஷ்வந்த் ஹாசினியை கொலை செய்தார்.
  • 2017 டிசம்பரில் தஷ்வந்த் அவரது தாயை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
  • இந்த வழக்கில் அவரது தந்தையே பிறழ் சாட்சியாக மாறி உள்ளார்.
ஹாசினியை கொன்ற கொடூரன்... தாயை கொன்ற வழக்கில் விடுதலை - திடுக் பின்னணி!

Daswant Released: குன்றத்தூர் அருகே தாயை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை குற்றவாளி தஷ்வந்தை விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தாயை கொலை செய்ததாக தஷ்வந்த் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டது. 

இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தந்தை சேகர் பிறழ் சாட்சியாக மாறிய நிலையில் அவரை விடுதலை செய்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இன்னும் குற்றவாளியாக சிறையில் இருக்கிறார்.

Daswant Released: பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு 

இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்தான் அவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. தூக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு தஷ்வந்த் செய்த குற்றம் என்ன, அவர் ஏன் தாயை கொலை செய்தார் என்ற பின்னணியை இங்கு விரிவாக பார்க்கலாம். 

சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியை சேர்ந்தவரின் மகள் ஹாசினி (வயது 6). கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானாள்.

மாங்காடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (அப்போதைய வயது 24) என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் உடலை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்துள்ளார்.

Daswant Released: தாயை கொலை செய்த தஷ்வந்த் 

இதை கண்டுபிடித்த தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரது தந்தை அவரை ஜாமினில் வெளியே எடுத்தார். குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்து அவா் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டது.

Daswant Released: தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை

மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடந்து வந்தது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 

மேலும் தாயை கொன்றதாக தஷ்வந்த் மீது அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Daswant Released: விடுதலை செய்த நீதிமன்றம்
 
இதில் அரசு தரப்பு மற்றும் தஷ்வந்தின் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்தை நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா விடுதலை செய்து தீர்ப்பளித்தார். 

இந்த வழக்கு விசாரணையின் போது தஷ்வந்தின் தந்தை சேகர் பிறழ் சாட்சியாக மாறி உள்ளார். தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொலை செய்ததை யாரும் பார்க்காததாலும், தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொலை செய்யவில்லை எனவும், மாங்காடு காவல் நிலையத்தில் தன்னிடம் இரண்டு புகார்களை காவல்துறையினர் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

Daswant Released: தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை 

இதன் அடிப்படையில் தஷ்வந்தை தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகை பணத்தை திருடி சென்ற வழக்கில் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். மேலும் சிறுமி ஹாசினியை கொலை வழக்கில்  தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டள்ள நிலையில், இவற்றை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். 

அதில் தஷ்வந்திற்க்கு தூக்கு தண்டனை வழங்கியது சரியானது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். தொடர்ந்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரயில்வே, வங்கி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

மேலும் படிக்க | டெல்லியில் நயினாருக்குப் பாடம் நடத்திய அமித் ஷா: தயாராகும் மெகா பிளான்?

மேலும் படிக்க | தமிழகத்தில் இன்று மழை வெளுக்கும்.. எங்கெல்லாம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News