வறுமையைப் போக்குவதற்கும், சமூகத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஆதரவளிப்பதற்கும் இலக்காகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏழை குடும்பங்களுக்கு உதவும் ஒரு திட்டமாக ரேஷன் கடைகள் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சந்தை விலையை விட கணிசமாகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் அடிப்படை ஊட்டச்சத்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பெரிதும் உதவுகிறது.
மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு வருமா? வராதா? முக்கிய அப்டேட்ஸ்
இந்த வழக்கமான உணவு பொருட்கள் வழங்குவதை தாண்டி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழக அரசு மாதாந்திர உதவி தொகையும் வழங்கி வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் கார்டு வைத்திருக்கும் தனிநபர்களுக்கு புடவைகள் மற்றும் பண உதவி போன்ற பரிசுகளை அரசு வழங்குகிறது. இந்த திட்டங்கள் சமூக உணர்வை அதிகரித்து, மாநிலத்தின் கலாச்சார கட்டமைப்பை வலுப்படுத்துகிறது. மேலும், துரதிஷ்டவசமான இயற்கை பேரிடர்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இழப்பீடு பெறும் முறையை அரசு கொண்டு வந்துள்ளது. இத்தகைய நெருக்கடிகளின் போது ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் உதவி தேவைப்படும் நபர்களுக்கு உதவி சென்றடைவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
மகளிர் உரிமை தொகை
இவை அனைத்தையும் தாண்டி, தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ₹1,000 உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் நிதி சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இந்த திட்டத்திம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 19 லட்சத்துக்கும் அதிகமான புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உதவி தொகையும் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நகல் ரேஷன் கார்டு
தற்போது, தமிழ்நாட்டில் சுமார் 37,000 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதன் மூலம் 2.29 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக சிலர் குடும்ப அட்டைகளை தொலைத்து விடுவார்கள். குடும்ப அட்டைகளை இழந்தவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் புரிந்துகொண்டு புதிய அட்டையை ஆன்லைன் மூலம் பெரும் செயல்முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு ஒருவரது குடும்ப அட்டை தொலைந்து விட்டால் வட்டாச்சியர் அலுவலகத்திற்கும், மாநகராட்சியில் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கும் நேரில் அலைய வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இதனால் பலரது நேரம் தான் விரயம் ஆனது. மேலும் புதிய அட்டை வருமா வராதா என்பதை தெரிந்து கொள்ளவும் மீண்டும் மீண்டும் அலைய வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதற்கு தீர்வு அளிக்கும் வகையில், நகல் ரேஷன் அட்டையை ஆன்லைன் மூலமாக பெறும் வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஆன்லைனில் ரூபாய் 50 கட்டணம் செலுத்தி ரேஷன் கார்டு நகலை பெற்றுக்கொள்ளலாம். கொரியர் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கு வந்து சேரும். 10 லட்சத்திற்கும் மேல் குடும்ப அட்டை தொலைத்து விட்டது என்று புகார் தெரிவித்தவர்களுக்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு இப்போது விண்ணப்பித்தால் எப்போது வரும்? முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









