)
Tamil Nadu electricity bill : தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களுக்கு உகந்த வகையில் சேவைகளை எளிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், பொதுமக்கள் தங்களின் மின் கட்டணங்களை செலுத்த தமிழ்நாடு அரசின் மின் வாரிய அலுவலங்களுக்கு செல்லத் தேவையில்லை. அங்கு லைன்களில் நிற்க தேவையில்லை. உங்களிடம் ஒரு செல்போன் இருந்தாலே ஆன்லைனில் எளிமையாக மின் கட்டணங்களை நொடியில் செலுத்திவிட முடியும்.
மின்சார வாரியத்தின் செயலி
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது ஒரு முக்கிய அறிவிப்பை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. அதில், மின்சார வாரியத்தின் TNPDCL செயலி மூலம் மின்கட்டணம் செலுத்துவது முதல் பழைய ரசீதுகளை எல்லாம் பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை உள்ளிட்டு லாகின் செய்யுங்கள். அதன்பிறகு, மின்சார இணைப்பு எண், மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொடுத்து உங்களின் மின் கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
மின்கட்டண ரசீதுகளை பதிவிறக்கலாம்
இதை செய்து முடித்தவுடன் உங்களின் மின் கட்டணம் தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் மாதம் மாதம் TNPDCL செயலியில் சரியாக வந்துவிடும். அந்த செயிலி வழியாகவே உங்களின் மின் கட்டணத்தை எளிமையாக செலுத்திவிடவும் முடியும். இதுதவிர, உங்களின் மின் கட்டண ரசீதுகளை எல்லாம் TNPDCL செயலியில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ செயலி என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது. இதுதவிர இன்னும் பல சேவைகளை இந்த செயலி வழியாகவும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்த தகவலுடன் சில முன்னெச்சரிக்கைகளையும் மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், மழைக்காலமாக இருப்பதால், அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடுவது, மிதிப்பது தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மின் கம்பம் அருகில் செல்வதை தவிர்க்கவும். மின் கம்பத்தினை தொடுவதை தவிர்க்கவும், தெரு மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நடப்பதை தவிர்க்கவும் என்றும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல்
மேலும், மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ