புதிதாக சொத்து வாங்க போறீங்களா? இனி இந்த பிரச்சனை இருக்காது!

தமிழகத்தி்ல் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. 

Written by - RK Spark | Last Updated : Jun 25, 2025, 08:33 AM IST
  • டிஜிட்டல் முறையில் வில்லங்க சான்று.
  • ரியல் எஸ்டேட் துறையினர் வரவேற்பு.
  • தமிழக அரசின் புதிய திட்டம்.
புதிதாக சொத்து வாங்க போறீங்களா? இனி இந்த பிரச்சனை இருக்காது!

வீடு மற்றும் மனைகள் விற்பனையின் போது பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் டிஜிட்டல் நடைமுறை பொதுமக்களுக்கு பெறும் பயனளிப்பதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி கோவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தி்ல் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் வியாழம் எனும் புதிய மனைப்பிரிவுகள் திட்ட துவக்க விழாவில், கலந்து கொண்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 'பட்டியலின மக்கள் நலனில் பாகுபாடு' திமுக மீது குற்றச்சாட்டு - ஆதவ் அர்ஜூனா சொல்வது என்ன?

அப்போது பேசிய அவர், வீடு மற்றும் மனைகள் விற்பனையின் போது பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் டிஜிட்டல் நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இந்த திட்டம், பொதுமக்களுக்கு பெறும் பயனளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ரியல் எஸ்டேட் துறையில் மலைகள் சார்ந்து உள்ள பகுதிகளில் உள்ள நிலங்களை விற்பனை செய்வதில், மலைகள் பாதுகாப்பு குழுமத்தில் உள்ள ஆக்கா விதிமுறையை எளிமைபடுத்த தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், அரசு இதில் கவனம் செலுத்தி விதிமுறைகளை எளிமைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அண்மையில் தமிழக அரசு மகளிருக்காக அறிவித்துள்ள நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட  இந்த திட்டம்  பாராட்டுக்குரியது என அவர் கூறினார். கோவையில் நகர் புற வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியான  மாஸ்டர் பிளான் திட்டத்தில்  சுமார் 1200 சதுர கிலோமீட்டர் வடிவமைக்கப்பட்டுள்ள மாஸ்டர் பிளான் திட்டம்   முழுமை பெற்றால்  கோவை நகரம் வளர்ச்சியில் பெரும் உச்சம் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்  நிர்வாகிகள் நேரு நகர் நந்து,செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க | மாதம் ரூ.1,500 ஓய்வூதியம்; தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம் - இவர்களுக்கு 'மட்டுமே' கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News