ஈஷாவின் தமிழ்த் தெம்பு திருவிழா: அனல் பறந்த 'ரேக்ளா பந்தயம்' - ஏகோபித்த வரவேற்பை கொடுத்த மக்கள்!

Isha Tamil Thembu Festival: ஈஷாவின் தமிழ்த் தெம்பு திருவிழாவில் கொங்கு நாட்டு வீர விளையாட்டான ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 10, 2025, 07:11 PM IST
  • தமிழ் தெம்பு திருவிழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டது.
  • மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.
  • மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு.
ஈஷாவின் தமிழ்த் தெம்பு திருவிழா: அனல் பறந்த 'ரேக்ளா பந்தயம்' - ஏகோபித்த வரவேற்பை கொடுத்த மக்கள்!

Isha Tamil Thembu Festival: கோவை ஈஷாவில் நடைபெற்று வரும் தமிழ்த் தெம்பு திருவிழாவில் கொங்கு நாட்டு வீரவிளையாட்டான 'ரேக்ளா பந்தயம்' கோலாகலமாக நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. ஆலாந்துறை அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Add Zee News as a Preferred Source

Isha Tamil Thembu Festival: 11 நாள்கள் திருவிழா

ஆதியோகி முன்பு தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா எனும் பிரம்மாண்ட விழா கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி 11 நாட்களாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக 'ரேக்ளா பந்தயம்' நேற்று ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் ரேக்ளா பந்தய மாட்டு வண்டிகள் மற்றும் காளைகளுடன் பங்கேற்றனர்.

Isha Tamil Thembu Festival

Isha Tamil Thembu Festival: பரிசுகள் அறிவிப்பு!

ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் பிரிவு மற்றும் 300 மீட்டர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. அதே போன்று இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம், நான்காம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.14 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும் 5 முதல் 15 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், 16 முதல் 30 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும் பந்தயத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Isha Tamil Thembu Festival

Isha Tamil Thembu Festival: நாட்டின மாடுகள், குதிரைகள் சந்தை

இதனுடன் ஆதியோகி முன்பு கடந்த 7ஆம் தேதி முதல் நாட்டின மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை நடைபெற்று வருகிறது. இதில் காங்கேயம், புங்கனூர், தார்பார்க்கர், கீர், சாஹிவால், பர்கூர் உட்பட 10க்கும் மேற்பட்ட நாட்டின ரக மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.  இதில் ரேக்ளா பந்தயத்திற்கான ஜோடி காளைகள், ஜல்லிக்கட்டு இளந்தாரி காளைகள், ஊட்டச்சத்து மிக்க பால் தரும் நாட்டின ரக பசுக்கள் ஆகியன அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே போன்று குதிரைகளில் மார்வாரி மற்றும் நாட்டுக் குதிரைகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.

Isha Tamil Thembu Festival: சந்தை நேற்றோடு நிறைவு

மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நாட்டு மாட்டுகள் மற்றும் குதிரைகளின் சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகளுக்கு 3 நாட்களுக்கும் தேவையான தீவனங்கள், தண்ணீர் மற்றும் வெயில் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலான அரங்குகள் உள்ளிட்டவை ஈஷா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சந்தைக்கு வரும் மக்களுக்கும் தேவையான தங்குமிடம் மற்றும் உணவு ஈஷா சார்பில் வழங்கப்பட்டது. இந்த சந்தை நேற்றோடு நிறைவடைந்தது.

Isha Tamil Thembu Festival: ஒருநாள் நீட்டிப்பு

தமிழ்த் தெம்பு திருவிழாவில் தமிழ்நாட்டை சார்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி, தமிழ் பண்பாட்டு கலைகளின் பயிற்சி பட்டறைகள், தினமும் மாலை வேளைகளில் தமிழ் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுக் கடைகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று இருந்தன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரளாக பங்கேற்றனர். 

இந்த ஆண்டு தமிழ்த் தெம்பு திருவிழா கடந்த பிப் 27 ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை 11 நாட்கள் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பொது மக்களிடம் இருந்த கிடைத்த சிறப்பான வரவேற்பினை முன்னிட்டு விழாவினை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு இன்றும் நடைபெற்றது.

மேலும் படிக்க | ஆசியாவின் மிகப்பெரிய பதஞ்சலியின் மெகா உணவுப் பூங்கா... சிறப்பம்சங்கள் என்ன?

மேலும் படிக்க | விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பதஞ்சலி! புதிய திட்டம் இதுதான்!

மேலும் படிக்க | பதஞ்சலியின் மெகா உணவு பூங்கா! ரூ.1,500 கோடி செலவில் உருவாகிறது..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News