மேல்மருவத்தூர் தைப்பூசம், இருமுடி விழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்பு

Southern Railway Thai Poosam Train: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெறும் இருமுடி மற்றும் தைப்பூச விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் நிறுத்தம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 18, 2025, 03:33 PM IST
மேல்மருவத்தூர் தைப்பூசம், இருமுடி விழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்பு

Temporary Train Halt In Melmaruvathur: தெற்கு ரயில்வே சார்பில், "தைப்பூசம் மற்றும் இருமுடி விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்ற நோக்கத்தில், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் பல விரைவு ரயில்களுக்கு தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தைப்பூசம் மற்றும் இருமுடி விழா ரயில் சேவை, மேல்மருவத்தூரில் நின்று செல்லும் ரயில்கள் அட்டவணை, எத்தனை நாட்களுக்கு நின்று செல்லும்? போன்ற விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

முக்கிய அம்சங்கள் (Key Highlights):

பெண்களுக்குச் சிறப்புரிமைகள்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், பெண்களுக்குச் சம உரிமைகளை வழங்குவதில் தனித்துவமானது. இங்கு பெண்கள் மூலவர் கருவறைக்குள் சென்று நேரடியாக வழிபடலாம் மற்றும் விக்ரகங்களுக்குப் பூஜைகள் செய்யலாம்.

முக்கிய விழாக் காலங்கள்: தைப்பூசம், இருமுடி, யுகாதி, தமிழ் புத்தாண்டு, ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை மற்றும் அடிகளாரின் பிறந்தநாள் ஆகியவை இங்கு கொண்டாடப்படும் முக்கிய விழாக்களாகும்.

பக்தர்கள் வருகை: தைப்பூசம் மற்றும் இருமுடி திருவிழாக்களின் போது பல லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே சலுகை: பக்தர்களின் வசதிக்காக, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கியத் தகவல்: 

- டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை.

- ரயில்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும்.

- தமிழ்நாடு முழுவதும் இயங்கும் மொத்தம்  57 ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

- தெற்கு ரயில்வே  அறிவிப்பால், ஸ்ரீ ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் செல்லும் பக்தர்களுக்குப் பயணத்தை எளிதாக்கும்.

முக்கிய விரைவு ரயில்கள் (சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுபவை) அட்டவணை:

ரயில் எண். 12635/12636 – வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ்

ரயில் எண். 12637/12638 – பாண்டியன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ்

ரயில் எண். 12653/12654 – ராக்போர்ட் அதிவிரைவு எக்ஸ்பிரஸ்

ரயில் எண். 16865/16866 – உழவன் எக்ஸ்பிரஸ்

மேலும் படிக்க - LIVE : SIR சிறப்பு முகாம், வாக்காளர் பட்டியல் குழப்பம், திமுக பகீர் குற்றச்சாட்டு - இன்றைய அப்டேட்ஸ்

மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : தகுதியில்லாதவர்கள் பட்டியல்! இதுதான்

மேலும் படிக்க - பொங்கல் பரிசு ரூ.2000? தமிழக அரசின் மெகா ஜாக்பாட் அறிவிப்பு? யார் யாருக்கு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News