12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government announcement : 12  ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஆதார் கார்டு திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2025, 08:42 AM IST
  • 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு..
  • தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
  • ஆதார் கார்டு திருத்தம் செய்துகொள்ளவும்
12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government announcement : 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் ஆதார் கார்டு திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் +2 பயின்று தேர்வு எழுதியுள்ள மாணவ/மாணவியர்கள் அடுத்து உயர் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் பொழுது சாதி, வருமானம் மற்றும் இருப்பிடம் தொடர்பான சான்றுகள், அனைத்து விபரங்களும் சரியாக உள்ள ஆதார் அட்டை ஆகியவை தேவைப்படும் என்பதால் வருவாய்த்துறை மூலம் பெற வேண்டிய சான்றுகளுக்கு உடனடியாக தங்களுக்கு அருகாமையில் உள்ள பொதுசேவை மையம் (E - Sevai centre ) மூலம் விண்ணப்பித்து சான்றுகள் பெற்று கொண்டு தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்போது தங்கள் கைவசம் உள்ள ஆதார் அட்டையில் உள்ள முகவரி, பிறந்ததேதி மற்றும் வயது தொடர்பான விபரங்கள் அனைத்து ஆவணங்களிலும் குறிப்பாக பள்ளி சான்றுகள், குடும்ப அட்டை ஆகியவற்றில் உள்ள விபரங்களுடன் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து திருத்தங்கள் ஏதும் தேவைப்படின் அதை சரி செய்திட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள ஆதார் சேவை மையத்தில் விண்ணப்பித்து புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையினை 30 தினங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் அரசு பள்ளிகளில் தமிழ் அல்லது ஆங்கில வழி கல்வி மூலமாகவும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயின்று உயர்கல்வி பயிலச் செல்லும் போது சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் "தமிழ் புதல்வன்” திட்டத்தின் மூலமாகவும், மாணவியர்கள் "புதுமைப் பெண்" திட்டத்தின் மூலமாகவும், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மூலம் விண்ணப்பித்து மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித் தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்பதால் கல்லூரியில் சேர்ந்த உடன் நிதி உதவியை பெற்றிடவும் உதவியாக இருக்கும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இந்த முக்கிய தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் அனைவருக்குமே தேவைப்படக்கூடியதுதான். எனவே, தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் இந்த முக்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் படிக்க | டாஸ்மாக்கில் ரூ.2,489 கோடி கூடுதல் வருமானம்... பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு!

மேலும் படிக்க | UPSC தேர்வு: இந்திய அளவில் டாப் 5 இடத்தை பிடித்தவர்கள் யார் யார்? தமிழ்நாட்டில் யார் முதலிடம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News