)
Tamil Nadu Government :தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருது 2025-2026- ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தகுதிகள்:
1. 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் (31 டிசம்பர்-ன் படி)
2. பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்
3. பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
4. பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்
5. வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல்
6. பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்.
7. ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரினை தமிழக அரசின் விருதுகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 29.11.2025 க்குள் விண்ணப்பிக்கவும். இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் கையேடாக (Booket) தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கையேட்டில் (Booklet) இணைக்கப்பட வேண்டிவை
1. பொருளடக்கம் மற்றும் பக்க எண் (Index))
2. இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் உயிர் தரவு (Bio data) சுயசரிதை (ம) Passport Size Photos-2
3. ஒரு பக்கம் தனியரின் பற்றிய விவரம் (Bulletin points) தமிழ் மருதம் மற்றும் ஆங்கிலம்)
4. தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்று இருப்பின் அதன் விவரம் / விருதின் பெயர் / யாரிடம் இருந்து பெறப்பட்டது மற்றும் பெற்ற வருடம்
5. கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் மற்றும் பக்கங்களுக்கு கொடி வைக்கவும்.
6. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்)
7. சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு.
8. இணைப்பு - படிவம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) முழுமையாக பூர்த்தி செய்து இணைக்கப்பட வேண்டும்.
இவ்விருதுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
அறை எண்:233,234 கூடுதல் கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம்.
மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04286-299460.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ