)
தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என பலதரப்பட்ட பதவிகளுக்கு, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தற்காலிக பணியிடங்களுக்கான முழு விவரங்கள் இங்கே.
நிபுணர்கள் - மக்கள் தொடர்பியல், பொது விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு, தரவு கண்காணிப்பு & ஆவணப்படுத்தல் மற்றும் சாலை பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய பிரிவுகளில் நிபுணர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு இதழியல், மக்கள் தொடர்பியல், கணினி அறிவியல், புள்ளியியல், டேட்டா சயின்ஸ், கணிதம், சிவில் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் துறையில் குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவம் அவசியம். மாநில, தேசிய அல்லது சர்வதேச அளவில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த எழுத்து மற்றும் தகவல் பரிமாற்றத் திறன் மற்றும் கணினி அறிவு அவசியம்.
உதவியாளர் - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் கூடுதல் தகுதியாககருதப்படும். நிர்வாக பணியில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் தேவை. தட்டச்சு திறன், கணினி அறிவு மற்றும் கம்யூனிகேஷன் திறன் அவசியம்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை/முதுகலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். டேட்டா மேனேஜ்மெண்ட், அலுவலக உதவி அல்லது நிர்வாக பணியில் 3 வருட அனுபவம் அவசியம்.
விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, பணி அனுபவம் மற்றும் திறன்களின் அடிப்படையில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்கள் 12 மாத காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு இ-மெயில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே விண்ணப்ப படிவத்தை https://www.tn.gov.in/job_opportunity.php என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
முழுமையாக பூர்த்தி செய்து உங்களின் CV, சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றை இணைத்து tnrsmu2025@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 25, 2025 ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ