ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு இந்தியா முழுவதும் இருந்து ராணுவத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் உள்ள பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.
மேலும் படிக்க | இந்தியா பாகிஸ்தான் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா? அமெரிக்கா ரியாக்ஷன்
நேற்று இரவில் இருந்து இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள சில முக்கியமான இடங்களை இந்தியா ட்ரோன்கள் மூலம் தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக ஸ்டாலின் அறிவிப்பு!
தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது. நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம்! என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.
நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம்… pic.twitter.com/Pxw0Xu2FCb
— M.K.Stalin (@mkstalin) May 9, 2025
மேலும் படிக்க | Ind Pak War: யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ