Tamil Nadu Govt Teacher News Tamil: தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் நலன் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 1-3 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் மற்றும் ஊதியக் குறைபாடுகளைச் சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

TN School Education Dept: தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறை சார்ந்த பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. புதிய பாடத்திட்டப் பயிற்சி, கோடை விடுமுறை குழப்பம், சிறப்பு டெட் (TET) தேர்வு மற்றும் ஊதியப் பிரச்சனைகள் என ஆசிரியர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் 5 முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
2026-27 கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை இப்போதே பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது. இது வெறும் தியரியாக இல்லாமல், QR Code வீடியோக்கள் மற்றும் செயல்முறை வழி கற்றல் (Activity Based Learning) முறையில் அமையவுள்ளது. இதற்காக மே மாத கோடை விடுமுறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
தற்போது ஆசிரியர்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய கவலை ஏப்ரல் மாத வேலை நாட்கள் தான். ஏப்ரல் 16 உடன் தேர்வுகள் முடிகின்றன. ஆனால் ஏப்ரல் 24 வரை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23-ல் தேர்தல் நடைபெறுவதால், 80% ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பணிக்கு நடுவே மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முடிவுகளை எப்படித் தயாரிப்பது என்பதில் தெளிவான வழிகாட்டுதல் இல்லை. இது குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுதி பெறாத ஆசிரியர்களுக்காக சிறப்பு டெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறுகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான 'பணிச் சான்று' (Service Certificate) வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என CEO-க்களுக்குக் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சான்று கிடைக்காமல் எந்த ஆசிரியராவது விண்ணப்பிக்க முடியாமல் போனால், அதற்கு அந்தந்த அதிகாரிகளே முழு பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
நீண்ட நாள் கோரிக்கையான பே மேட்ரிக்ஸ் (Pay Matrix) சிக்கலுக்குத் தீர்வு காணும் பணிகள் தொடங்கியுள்ளன. சில ஆசிரியர்களுக்குப் பே மேட்ரிக்ஸ் லெவல் முடிவடைந்ததால், அடுத்தடுத்த ஆண்டு ஊதிய உயர்வு (Increment) பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
தற்போது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை, பணிப் பதிவு மற்றும் ஊதிய விவரங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் ஊதிய உயர்வுச் சிக்கல் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஊதிய வித்தியாசம் குறித்து ஆசிரியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 90 மதிப்பெண்களுக்கு ஒரு விடைத்தாள் திருத்தினால் ரூ.10 வழங்கப்படும். அதேநேரம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 100 மதிப்பெண்கள் அடங்கிய ஒரு விடைத்தாளுக்கு ரூ.8 வழங்கப்படும். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதிக மதிப்பெண்களுக்கு விடைத்தாள் திருத்தும் 10-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்குவது நியாயமற்றது என்றும், இதைச் சமமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தியரியாக இல்லாமல், QR கோட் வீடியோக்கள் மற்றும் ஆக்டிவிட்டி பேஸ்டு (Activity Based) முறையில் முற்றிலும் நவீனமாக மாற்றப்பட உள்ளது.
புதிய பாடத்திட்டத்தை எப்படிக் கையாளுவது என்பது குறித்த சிறப்புப் பயிற்சிகள், வரும் மே மாத கோடை விடுமுறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிந்தாலும், ஏப்ரல் 24 வரை பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் ஏப்ரல் 23-ல் தேர்தல் நடைபெறுவதால், 80% ஆசிரியர்கள் தேர்தல் பணிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் மாணவர் சேர்க்கை பணிகளில் சிக்கல் ஏற்படும் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு 'பணிச் சான்று' (Service Certificate) மிக அவசியம்.
பணிச் சான்று வழங்குவதில் முதன்மை கல்வி அலுவலர்கள் தாமதம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் எந்த ஆசிரியராவது தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ