)
Tamil Nadu government Jobs : சென்னை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் பகுப்பாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் பகுப்பாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி
தகவல் பகுப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து புள்ளியியல்/ கணிதவியல்/ பொருளாதாரம்/காணினி அறிவியல் (BCA) ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியில் பணிசெய்யத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக 42 வயது மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விவரங்கள் https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு உரிய படிவத்தில் புகைப்படம் மற்றும்சுயக் கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து செய்தி வெளியீடு செய்யப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் மாலை 5:45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு, எண்:1, புதுத்தெரு, GCCவணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூர், சென்னை 600016. (RTO office அருகில்) என்ற முகவரியில் நேரிலோ/அஞ்சல் வழியாகவோ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
நேர்முக தேர்வு
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதிளைக் கொண்டிராதவர்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் ஆகியன பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. மேற்காணும் பணியிடத்திற்கு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர், பணியில் சேரும் நாளன்று காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police Verification) கட்டாயமாக வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாக படித்து, அதன்பின் விண்ணப்பிப்பது குறித்து முடிவெடுக்கவும். ஒப்பந்த அடிப்படையிலான வேலை என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பில் இடம்பெற்றுள்ள கல்வித் தகுதி உங்களிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ