)
Joy Crizildaa Request To CM : சின்னத்திரையுலகில் பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் கமிஷனர் அலுவகத்தில் புகாரளித்தார். இதையடுத்து, இது குறித்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை குற்றம் சாட்டியிருக்கிறார். முழு தகவலை இங்கு பார்ப்போம்.
ஜாய் கிரிஸில்டா கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
கடந்த ஜூலை மாதம், தானும் மாதம்பட்டி ரங்கராஜும் திருமணம் செய்து கொண்டதாக ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளங்களில் பதிவிட்டார். ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் ரங்கராஜ், விவாகரத்து பெறாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தது பெரும் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஜாய் கிரிஸில்டா கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதில் தனக்கும் ரங்கராஜுக்கும் 2023ல் திருமணம் ஆனதாகவும், அதிலிருந்து தாங்கள் ஒன்றாகத்தான் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தன் குழந்தைக்கும் தனக்கும் பதில் வேண்டும், உரிமை வேண்டும் என்று கேட்ட அவர் தன்னுடன் இப்போது அவர் டச்சிலேயே இல்லை என்றும் கூறியிருந்தார். இதைத்தாண்டி, இதற்கு முன்னர் இரண்டு முறை கரு கலைந்திருப்பதாகவும், நேரில் பேச கூட மாதம்பட்டி தயாராக இல்லை என்றும் கூறியிருந்தார். குக் வித் கோமாளி செட்டிற்கு சென்ற போது தன்னை அவர் அடித்ததாகவும் கூறியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.
ஜாய் கிரிஸில்டாவின் பதிவு..
ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், தனக்கும் தன் குழந்தைக்கும் நியாயம் வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். தான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து 10 நாட்கள் மேலாகியும், தன்னை பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டதாக கூறியிருக்கிறார். மேலும், கர்ப்பமாக இருக்கும் இந்த காலக்கட்டத்திலும், பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் கொடுத்ததாகவும், இப்போது அதன் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிற்றார்.
Justice for my unborn child.#Appa @CMOTamilnadu @chennaipolice_ @tnpoliceoffl @ArunIPSCOP
— Joy Crizildaa (@joy_stylist) September 8, 2025
It’s been 10 days since I submitted a complaint to the Chennai city commissioner, narrating how celebrity chef and actor Mr. Madhampatti Rangaraj cheated and deceived me into MARRIAGE…
இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மேலும் அவர் தனக்கு எதிராக அநாகரீகமான, ஆபாசமாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
முதல்வரிடம் கோரிக்கை:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை “அப்பா” என்று குறிப்பிட்டிருக்கும் அவர், “உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற துரதிர்ஷ்டவசமான பெண்கள் நம்புகிறார்கள். நீங்கள் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி மன்றாடுகிறேன். எந்தவொரு விஐபியும் ஒரு பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுற்றித் திரிய முடியுமா? என் பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஜாய் கிரிஸில்டாவின் நேர்காணல்..
ஜாய் கிரிஸில்டா, சர்ச்சைகளுக்கு பிறகு சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், தன் தரப்பில் இருக்கும் விஷயங்களை கூறிய அவர் தான் பணத்திற்காக மாதம்பட்டி ரங்கராஜை குழந்தையை வைத்து மிரட்டுவதாக பலர் எழுதுவதாகவும், அது உண்மை இல்லை என்றும் பேசியிருக்கிறார். தன்னை பற்றி இப்படி எழும் விஷயங்கள் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் இன்னும் எதுவும் வாய் திறக்காதது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ