)
Kalaignar Magalir Urimai Thogai: தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வெகு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அந்த திட்டம் தமிழ்நாட்டு பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு கொடுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளாக உள்ள பெண்களின் அன்றாட வாழ்க்கையே மாறியிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு வெளியிட்ட புள்ளிவிவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ஆய்வறிக்கை
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கணக்கெடுக்கப்பட்ட 5180 வீடுகளில், 3323 வீடுகள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளைக் கொண்ட குடும்பங்களாக இருக்கின்றன. அதாவது, இத்திட்டத்தின் 64% கவரேஜைக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் கணக்கெடுக்கப்பட்ட 5131 வீடுகளில் 2840 வீடுகள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் உள்ளன, இது 55% கவரேஜைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக, கணக்கெடுக்கப்பட்ட 10311 வீடுகளில் 6163, அதாவது 60% வீடுகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் உள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள்
இதை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் சமூகத்தின் மிகவும் ஒதுக்கப்பட்ட பிரிவு மக்களை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சென்றடைந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 46% கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளும், தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் 16% பேரும் நமது சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுகளான பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளில் ஐந்தில் ஒரு பங்கு மிகவும் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் (MBC). AAY அல்லது PHH ரேஷன் கார்டுகளைக் கொண்ட ஏழை குடும்பங்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வருவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 76% மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் AAY அல்லது PHH அட்டைகளைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் நகர்ப்புற தமிழ்நாட்டில் 36% KMUT பயனாளிகள் AAY அல்லது PHH அட்டைகளைக் கொண்டுள்ளனர்.
பெண் பயனாளிகளின் விவரங்கள்
* மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளில் 15% பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள். 17%, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் விதவைகள் அல்லது கணவனை பிரிந்தவர்கள் அல்லது விவாகரத்து பெற்றவர்கள் அல்லது திருமணமாகாத ஒற்றைப் பெண்களாக இருக்கின்றனர்.
* கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளி குடும்பங்களில் 7% ஒற்றை உறுப்பினர் குடும்பங்கள்.
* மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளில் 32% பேர் முறையான கல்வி இல்லாத கல்வியறிவற்றவர்கள்;
* KMUT பயனாளிகளில் பெரும் பகுதியினர் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்;
* மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளில் பெரும் பகுதியினர் மோசமான வீட்டு நிலைமைகளில், கழிப்பறை வசதிகள் கூட இல்லாத நிலையில் வசிப்பதாக ஆய்வு கூறுகிறது.
மகளிர் உரிமைத் தொகை பணம் எதற்கு பயன்படுகிறது?
1. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளுக்கு உணவுப் பாதுகாப்பை கொடுத்துள்ளது. மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் பணம் பெரும்பாலும் குடும்பத்திற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
2. பெண்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு அதிகம் செலவு செய்கின்றனர். அதிக காய்கறிகள், அதிக மளிகைப் பொருட்கள், சிறந்த தரமான அரிசி மற்றும் அதிக பால் ஆகியவற்றை வாங்குகின்றனர்.
3. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 39% பயனாளிகளும், நகர்ப்புறங்களில் 35% பயனாளிகளும் மகளிர் உரிமைத்தொகை பணத்தை மருந்துகளை வாங்குவதற்குப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
4. ஐந்தில் ஒரு பங்கு பயனாளிகள் தங்கள் KMUT பணத்தை தங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவதாக தெரிவிக்கின்றனர்;
5. கடன்களை திருப்பிச் செலுத்துதல், எல்பிஜி சிலிண்டர் வாங்குதல், மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்தல், சிறு சேமிப்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு பயனாளிகள் தங்கள் உரிமைத் தொகையை செலவிடுகின்றனர்.
6. மாநிலத்தில் ஐந்தில் இரண்டு பங்கு மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் இந்த பணத்தை மாதா மாதம் பெறுவதால் அவர்கள் உணரும் மிக முக்கியமான மாற்றம் அவர்களின் தன்னம்பிக்கை மேம்பட்டுள்ளதாக உணர்கிறார்கள்
7. கிராமப்புறங்களில் 70% பயனாளிகள் KMUT பணத்தைப் பெறத் தொடங்கியதிலிருந்து, மளிகைப் பொருட்களுக்காக சிறிய கடைகளில் கடன் வாங்குவது குறைந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். நகர்ப்புறங்களில், அதனுடன் தொடர்புடைய சதவீதம் சுமார் 55% ஆகும்.
8. உரிமைத் தொகை திட்டத்துக்குப் பிறகு பெண்களின் பயணத் திறன் மேம்பட்டுள்ளது. அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகச் செலவிடும் திறன் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைத்து அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தியுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ