)
Magalir Urimai Thogai: தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி தகுதியுள்ள ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில், தமிழக அரசு "உங்களுடன் ஸ்டாலின்" என்ற சிறப்பு முகாம்களை நடத்த வருகிறது. இந்த முகாம்கள் மூலம், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தகுதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும், பல்வேறு காரணங்களால், தகுதியிருந்தும் பல லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வருமான வரம்பு, நில உடைமை மற்றும் ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களால் பலர் இந்த திட்டத்தில் இணைய முடியாமல் போனது.
இந்த சூழலில், விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளையும் திட்டத்தில் இணைக்கும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி கவனத்தின் கீழ் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் சிறப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. இந்த முகாம் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்து, சிறிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படும். தேவையான கூடுதல் ஆவணங்களை பெற்று, தகுதியுள்ளவர்களை திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை விண்ணப்பிக்க தவறிய தகுதியுள்ள பெண்கள், இந்த முகாம்களில் புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள், ஆவணங்கள் குறித்த குழப்பங்கள் மற்றும் மேல்முறையீடு செய்வது எப்படி என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த முகாம்களில் உரிய விளக்கம் அளிக்கப்படும்.
இந்த சிறப்பு முகாம்கள் மூலம், மேலும் பல லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வருமான சான்றிதழ் பெறுவதில் சிக்கல்களை சந்தித்த பெண்கள் இந்த முகாம்களால் பெருமளவில் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, திட்டத்தின் பலன்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த முகாம்கள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் அரசு வெளியிட்டு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ