)
Kalaignar Magalir Urimai Thogai Scheme: தமிழ்நாட்டு பெண்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்கள் ஆர்வமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து வருவதாகவும், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கூறிய முக்கிய தகவல் என்ன?
குறிப்பாக, விடுப்பட்ட பெண்கள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்கும் என்றும், தகுதியானவர்களாக இருப்பினால் விடுபடாமல், அவர்கள் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்திருக்கும் இந்த தகவலைப் பார்க்கும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி, 2023 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கபட்டது.
எப்போது அறிவிப்பு வெளியாகும்?
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று 3வது ஆண்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பயணிக்க உள்ளது. இதன் சிறப்பை குறிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் தொடர்பான முக்கிய அப்டேட் அரசு தரப்பில் இருந்து வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
பயனாளிகள் தேர்வு
இப்போது வரை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். புதிய பயனாளிகள் சேர்ப்பது பணிகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மகளிர் நலன், வருவாய் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலனை, பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவை நடந்து கொண்டிருப்பதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அது தொடர்பான இறுதி பட்டியல் தயாரித்த பிறகு, யாரெல்லாம் இத்திட்டத்தில் சேர்க்கப்பட இருக்கிறார்கள் என்ற விவரம் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.
புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 எப்போது வரும்?
மாவட்ட வாரியாக இறுதிப் பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதி பயனாளிகள் முடிவான பிறகு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியிருக்கும் என்ற கணக்கீடுகள் எல்லாம் நிதித்துறை முடிவு செய்து, அதன்பிறகு இறுதி முடிவு முதலைமச்சருக்கு தெரிவிக்கப்படும். அதன்பிறகு புதிய பயனாளிகளுக்கு எப்போது முதல் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது டிசம்பர் மாதத்துக்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு, பொங்கல் பரிசாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தீபாவளி பரிசாக அறிவிப்பும், பொங்கல் பரிசாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பணமும் இருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ