காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் இன்று முதல் புதிய பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காரைக்குடி – பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்று கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.


இந்நிலையில் இன்று முதல் வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயில் பயணிகளுக்காக இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டனூர், புதுவயல், வாழ்கிறமாணிக்கம், அறந்தாங்கி, ஆயங்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு வழியாக மதியம் 12:30 மணிக்கு பட்டுக்கோட்டையை அடையும். 


பின்னர் அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு இரவு 7:30 மணிக்கு வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.